<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>என் மன வானில்...</title>
	<atom:link href="http://jaggybala.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://jaggybala.wordpress.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sun, 13 Nov 2011 09:44:01 +0000</lastBuildDate>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='jaggybala.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://s2.wp.com/i/buttonw-com.png</url>
		<title>என் மன வானில்...</title>
		<link>http://jaggybala.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://jaggybala.wordpress.com/osd.xml" title="என் மன வானில்..." />
	<atom:link rel='hub' href='http://jaggybala.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>அர்ஜுன்</title>
		<link>http://jaggybala.wordpress.com/2011/07/29/name/</link>
		<comments>http://jaggybala.wordpress.com/2011/07/29/name/#comments</comments>
		<pubDate>Fri, 29 Jul 2011 08:29:54 +0000</pubDate>
		<dc:creator>jaggybala</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[கலாச்சாரம்]]></category>
		<category><![CDATA[சுயபுராணம்]]></category>
		<category><![CDATA[அர்ஜுன்]]></category>
		<category><![CDATA[அறியாமைக் கொள்கை]]></category>
		<category><![CDATA[வலி]]></category>

		<guid isPermaLink="false">http://jaggybala.wordpress.com/?p=1190</guid>
		<description><![CDATA[குழந்தைக்குப் பெயர் வைக்கும் படலம் என்பது பெரும்பாலானோரை தீவிரமாய் சிந்திக்க வைக்கிறது. நெடுந்தாடி வைத்த லௌகீக பிச்சைக்காரர்களிடம் சென்று ரேண்டம் ஆர்டர் படி பெயர் வைப்பவர்களும், எண் மேதைகள் கொண்டு Vikram-ஐ Vickkrum என பெயர் மாற்ற ஆயத்தமாய் இருப்பவர்களும் இதில் அடங்க மாட்டர். பலர் தங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்/வைக்கக்கூடாது என்பதைப் சிறு வயதிலிருந்தே சிந்திக்கத் தொடங்குவார்கள். நானும் அப்படியே &#8230; பதின் பருவத்தின் தொடக்கத்தில் கிரிக்கெட்டை ஆத்மார்த்தமாக நேசித்திருக்கிறேன். பையன் பிறந்தால் சச்சின் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=jaggybala.wordpress.com&amp;blog=6602267&amp;post=1190&amp;subd=jaggybala&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>குழந்தைக்குப் பெயர் வைக்கும் படலம் என்பது பெரும்பாலானோரை தீவிரமாய் சிந்திக்க வைக்கிறது. நெடுந்தாடி வைத்த லௌகீக பிச்சைக்காரர்களிடம் சென்று ரேண்டம் ஆர்டர் படி பெயர் வைப்பவர்களும், எண் மேதைகள் கொண்டு Vikram-ஐ Vickkrum என பெயர் மாற்ற ஆயத்தமாய் இருப்பவர்களும் இதில் அடங்க மாட்டர்.</p>
<p>பலர் தங்கள் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்/வைக்கக்கூடாது என்பதைப் சிறு வயதிலிருந்தே சிந்திக்கத் தொடங்குவார்கள். நானும் அப்படியே &#8230; பதின் பருவத்தின் தொடக்கத்தில் கிரிக்கெட்டை ஆத்மார்த்தமாக நேசித்திருக்கிறேன். பையன் பிறந்தால் சச்சின் என்று பெயர் வைக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருந்தேன். சச்சினையும், அதனால் சச்சின் என்கிற பெயரையும் ஒவ்வொரு இந்தியனும் இன்றுவரை மனமாற நேசித்துக்கொண்டுதான் இருக்கிறான். அப்பாவின் மறைவுக்குப் பின் பாலு என்கிற பெயர் கனவாகிப்போனது. கனவுக்குத் தினம் தினம் தீனி போட்டு அப்பெயரையும் அவ்வுள்ளத்தையும் மனமாற நேசித்தேன். கிடைக்காமல் போன காதலியின் பெயரை வைப்பதிலேயே மனிதனுக்கு நாட்டம் இருக்கும் போது, கனவாகிப் போன &#8220;பாலு&#8221; என்கிற பெயர் சிறந்ததாய் இருக்கும் என நான் எண்னியதில் வியப்பேதும் இல்லை.</p>
<p>அப்பா இறக்கும் வரை படிப்பும் புத்தகமும் எனக்கு பாகற்காய் வேப்பங்காய். அது என்னமோ பத்தாவது படிக்கையில் திடீரென ஞானோதயம் பிறந்து படிப்பே கதியென்று மூன்று வருடங்கள் இருந்தேன். கணக்கு வசமானது, வேதியியல் வேதமானது. படிப்பே போதையானது. நான் மேதாவி அல்ல என்பதை சர்வ நிச்சயமாய் அறிவேன். அவ்வெண்ணமே படிப்பிற்கான என் உழைப்பபிற்கு ஊன்று கோலாகவும் இருந்தது. உண்மையாகவே சொல்லுகிறேன், இயற்பியல் புத்தகத்தின் நூற்றி நாற்பத்தைந்தாம் பக்கத்தின் இரண்டாவது பத்தியில் என்ன இருக்கிறது என்று யாராவது கேட்டிருந்தால் நிச்சயம் சரியான பதிலையே சொல்லியிருப்பேன். சினிமா, பெண்கள் &#8211; இவ்விரண்டிலும் கூட ஆர்வமற்று இருந்திருக்கிறேன் என்று நினைக்கையில் ஆச்சர்யமாகவே இருக்கிறது.</p>
<p>பதின் பருவம் முடியும் வரை நான் ரஜினி ரசிகன். உண்மையில் கமல்ஹாசனைத் தான் அப்போதே பிடிக்கும். &#8220;கமல் ஒரு பொம்பளைப் பொறுக்கி, அவன பிடிக்கும்னு சொல்லாதே.. சொல்லாதே.. ரஜினிதான் பிடிக்கும்னு சொல்லு&#8221; என எட்டு வயது முதலே மிரட்டி வளர்த்திருந்தாள் அக்கா. இன்று வரை நான் சினிமா பைத்தியம் என்றாலும், ஒரு கட்டத்தில் நன்றாய்ப் படிக்க ஆரம்பித்துக் கல்லூரியில் சேர்ந்திராவிட்டால், இப்போது அஜித் ரசிகர் மன்றத்தின் ஒரு பதவியில்(!) இருந்திருப்பேன் என்றே தோன்றுகிறது.</p>
<p>இருபதுகளின் தொடக்கத்தில் அவ்வயதிற்கே உண்டான செருக்கும் கர்வமும் ஏமாற்றமும் கலந்து சென்றது கல்லூரி வாழ்க்கை. நான் சுயம்பு அல்ல. ஆனாலும் சுயம் என்னும் வார்த்தையின் அகண்ட விளக்கம் புரிய ஆரம்பித்திருந்தது இக்காலத்தில்தான். பெரியார் அறிமுகமானார். பின் திராவிடம், உலகியல், இஸ்லாம், ஈழம், பாலஸ்தீனம், கம்யூனிசம், etc. etc. கமல்ஹாசனை மென்மேலும் ரசிக்க ஆரம்பித்திருந்தேன். நண்பன் ப்ரமோத் ஒருமுறை என்னிடம் சொன்னான் &#8211; &#8220;கமல் மாதிரி நாமளும் நம்ம வேலையை ரசிச்சுப் பண்ணனும்டா&#8221;&#8230; மிக சாதாரணமான வரி தான், ஆனால் அதில்தான் எவ்வளவு உண்மை இருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை <strong>பரமக்குடிக்காரருக்கே நான் பரம ரசிகன்</strong>. இப்போது ஸ்ரீராம், ஆதி, மதன் என பல பெயர்களை பட்டியலில் வைத்திருந்தேன்&#8230;</p>
<p>கல்லூரி முடித்து பின் ஜெர்மனி செல்லும் வரையில் திருமணம், குழந்தைக்கு பெயர் என எதிலும் நாட்டமில்லாமல் இருந்ததாய்த் தான் ஞாபகம்.</p>
<p>இருபதுகளின் தொடக்கத்தில் அடிப்படை கம்யூனிசத்தின் மீது மையம் கொள்ள ஆரம்பித்திருந்தேன். உழைப்பவர்களுக்கே நிலம் சொந்தம் என்னும் சித்தாந்தத்தில் பெரு நம்பிக்கை கொண்டிருந்தேன். தமிழை நுண்ணிய உணர்வோடு நேசிக்க ஆரம்பித்ததும் இக்காலத்தில்தான். இலக்கியமும் இலக்கணமும் எட்டா தூரத்தில் இருந்தாலும், உரைநடைப் புத்தகங்களும், நடைமுறைக் கூறுகளும் எனக்கான உலகைக் காட்டியது. நான் மையல் கொண்ட பெண் கூட ஒருமுறை என்னிடம் இப்படி சொன்னாள் &#8211; &#8220;உன்னால ஒரே ஒரு அட்வான்டேஜ் என்னன்னா, நான் நம்ம குழந்தைக்கு தமிழ் சொல்லிக்குடுக்க வேண்டியதில்லை.&#8221;</p>
<p>நிற்க&#8230; உங்களை அல்ல, எனக்கே சொல்லிக் கொள்கிறேன். இதே போக்கில் எழுதிக் கொண்டிருந்தால் சொல்ல வந்ததை விட்டு விடுவேன். அதிலும் பெண்கள், மையல் என ஆரம்பித்தால் பின் ஆடல், ஊடல், கூடல் என்று கட்டாயம் மனம் போகும். பின்நாட்களில் என் மகன் இதைப் படிக்கையில் நீ இந்தக் கட்டுரைக்கு டைட்டிலை &#8220;ஜக்கி பாலா&#8221; அப்படீனே வச்சிருக்கலாம் என்று சொன்னாலும் சொல்லக் கூடும். எனவே &#8230;..</p>
<p><strong>***</strong></p>
<p>2011 &#8211; மார்ச் மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி அதிகாலை ரேணுகா தேவி என்னும் நல்ல டாக்டர், லீலா என்னும் அரைகுறை டாக்டருக்கு பிரசவ வலி எடுப்பதற்காக ஒரு மாத்திரையைத் தர, என் அணு சென்ற வழியே நானும் சென்று &#8220;கவலைப்படாதே அமெலி/அபிநயா/அபிராமி, everything will be okay&#8230;&#8221; என Virtual-ஆக நான் சொல்லிக்கொண்டிருக்க, நேத்துக் கூட பையன் பொறப்பான்னு பேசிட்டு இருக்கும்போது கோயில்ல மணி அடிச்சுது என்று சொல்லிக்கொண்டே என் அம்மா மகமாயியை மனதிற்குள் கூப்பிட, இது எது பற்றியும் கவலையில்லாமல் லீலாவின் அப்பா குறட்டை விட்டுத் தூங்க, ஆரம்பித்ததய்யா உயிர் வலி &#8230;</p>
<p>பிரசவ வார்டுக்குள் கூட்டிச் சென்றார்கள்.</p>
<p>&#8220;அரைமணிக்கு ஒரு முறை விட்டு விட்டு வலிக்கும்&#8230; வலி கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகும். பேபி இன்னும் 4-5 ஹவர்ஸ்ல வந்திரும். இடையில ஹஸ்பண்ட் மட்டும் டூ டைம்ஸ் போய்ப் பார்க்கலாம், ஆனா சீக்கிரம் வந்திரணும்&#8221; என்றார் டாக்டர். சரி என்று தலையாட்டி விட்டு வந்த என் அம்மா நேரே பிரசவ வார்டுக்குள் நுழைந்தார்.</p>
<p>&#8220;அம்மா&#8230; இப்பத்தானே டாக்டர் போகக்கூடாதுன்னு சொன்னாங்க. நான் மட்டும்தான் போகணும், அதுவும் டூ டைம்ஸ்தான்&#8221; என்றேன்.</p>
<p>&#8220;ம்க்கும், அவ கிடக்கறா&#8230; அவளா புள்ளை பெத்துக்கப் போறா. வலி வர்றவளுக்குத்தான் தெரியும்&#8230; வலியைக் கூடப் பொறுத்துக்கலாம், ஆனா அந்த நேரத்துல பக்கத்துல ஒரு உசிரு இல்லைன்னா உலகமே இருண்ட மாதிரி ஆயிரும்&#8221; என்றாள் அம்மா.</p>
<p>&#8220;அதான் நர்ஸ் இருப்பாங்களே&#8230;&#8221;</p>
<p>&#8220;நீ வாயை மூடிக்கிட்டு அங்க போயி அந்த டாக்டர் பொம்பளை வர்றாளான்னு பாரு போ&#8230;&#8221; என சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் பிரசவ வார்டுக்குள் நுழைந்தாள் என் அம்மா.</p>
<p>சில சமயங்களில் அம்மா Impossible to manage but logically correct. இந்த மாதிரி விஷயங்களில் நான் எக்கச்சக்கமாய் சொதப்பிவிடுவேன். பிரசவ வார்டுக்குள் சென்றிருந்தால் பக்கத்தில் இருக்கும் நர்ஸிடம் &#8220;சாரி டாக்டர், தெரியாம வந்துட்டேன்&#8221; என்று சொல்லிவிட்டுத் திரும்பியிருப்பேன். லீலாவின் அம்மாவும் என் ரகம் என்பதால் நாங்கள் இருவரும் வெளியே காத்திருந்தோம்.</p>
<p>பத்து நிமிடம் கழித்து வந்த அம்மா, &#8220;உன்னைக் கூப்பிடறா, உள்ள போ&#8221; என்றார்.</p>
<p>&#8220;அம்மா, டூ டைம்ஸ் தான்&#8230; &#8221; என வாயெடுத்தவன் பின் சுதாரித்துக் கொண்டு உள்ளே சென்றேன். நர்ஸோ டாக்டரோ இல்லை. நன்று.</p>
<p>லீலாவின் காதருகே சென்று, &#8220;நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். பொண்ணா இருந்தா Amelie, பையனா இருந்தா&#8230; இருந்தா&#8230; அப்பறமா சொல்றேன் &#8220;</p>
<p>உண்மையில் பெண்ணாய் இருக்க வேண்டும் என்றுதான் ஏழு மாதங்களும் வேண்டியிருக்கிறேன், பல பெண் பெயர்களை யோசித்தும் வைத்திருக்கிறேன். இதுவரையிலும் நல்ல மகனாக, காதலனாக, கணவனாக இருந்திருக்கவில்லை. அம்மா, காதலி, மனைவி &#8211; இவர்களின் பொறுமையும் கருணையுமே என்னைப் பொறுத்துக்கொள்ள வைத்திருக்கிறது. ஆனால் என் மகளுக்கு ஒரு நல்ல தந்தையாக இருப்பேன் என்றுமட்டும் ஆழமாக நம்பினேன். நல்லூழ் காரணமோ?</p>
<p>லீலாவுக்கு வலி அதிகரித்திருந்தது. அழுதாள். பின் கெஞ்சினாள். என்னால் தாங்க முடியவில்லை. நிற்கவும் முடியவில்லை. நேரே டாக்டரிம் சென்று, &#8220;டாக்டர், அவளுக்கு சிசேரியன் பண்ணிருங்க&#8221; என்றேன்.</p>
<p>&#8220;சிசேரியன்ல நிறைய காம்பிளிகேஷன்ஸ் இருக்கு சார். பின்னால அவங்க ரொம்ப சிரமப்படுவாங்க. படிச்சவரா இருக்கீங்க, உங்க வைஃப் வேற டாக்டர்.. நீங்களே இப்படிப் பேசினா எப்படி, எல்லம் கொஞ்ச நேரத்துல சரியாயிடும்&#8221; என்றார்.</p>
<p>அம்மாவிடம் சென்றேன். &#8220;என்னால நிக்கக் கூட முடியலம்மா. ரொம்ப பாவமா இருக்கு&#8221; என்றேன்.</p>
<p>&#8220;நீ அடிக்கடி உள்ளே போய் ஆறுதல் சொல்லு. இந்த ஒரு குழந்தை போதும், இனிமேல் பெத்துக்க வேண்டாம்.. அப்படி, இப்படீன்னு ஏதாச்சும் சொல்லு.&#8221;</p>
<p>&#8220;ஆனா டாக்டர் டூ டைம்ஸ்&#8230;&#8221;</p>
<p>&#8220;எது?&#8221;</p>
<p>&#8220;ஒண்ணுமில்ல&#8221;</p>
<p>&#8220;ம்ம்&#8230; உங்க அக்கா பொறக்கறப்ப நான் அவனாசி ஆஸ்பத்திரியில இருக்கேன். என் கூட எங்க அம்மா, அக்கா, நாத்தனார் எல்லாரும் இருந்தாங்க&#8230;  வலி அதிகமாக அதிகமாக பொறுக்க முடியாம கத்திக்கூப்பாடு போட்டேன். வலியோட கோபமும் சேர்ந்து என்ன பண்றன்னே தெரியாம் எல்லாரையும் கண்டபடி திட்ட ஆரம்பிச்சுட்டேன்&#8230;&#8221;</p>
<p>&#8220;அய்யய்யோ, என்னன்னு திட்டினே?&#8221;</p>
<p>&#8220;அது என்னென்னமோ சொல்லித் திட்டினேன். கழுதை முண்டைகளா, இப்படி வலிக்கும்னு எவளாச்சும் சொன்னீங்களாடி.. தெரிஞ்சிருந்தா நான் குழந்தையே பெத்திருக்க மாட்டேன் அப்படி இப்படீன்னு திட்றேன். எங்க அம்மாவும் நாத்தனாரும் பொசுக்குன்னு எந்திருச்சு வெளியே போனாங்க.. கோவம் அதிகமாகி அத்தனை வலியிலையும் எந்திருச்சு போய் ஜன்னலை திறந்து திட்டினேன்&#8230;&#8221;</p>
<p>நான் கொஞ்சம் வெலவெலத்துப் போனேன்.</p>
<p>&#8220;ஆனா அப்பறமா நீ பொறந்தப்ப நாத்தனார் வந்து கேட்டா.. இப்படி வலிக்கும்னு இப்ப யாரு வந்து சொன்னாங்க உனக்கு?&#8221; என்று சிரித்தாள். என்னாலும் சிரிக்க முடிந்தது.</p>
<p>மறுமுறை பிரசவ வார்டுக்குள் செல்கையில் வலி உச்சத்தைத் தொட ஆரம்பித்திருந்தது. அம்மாவின் வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தன. அப்படியே ஒப்பித்தேன்.</p>
<p>&#8220;கவலைப்படாதே லீலா&#8230; இன்னும் கொஞ்ச நேரத்தில எல்லாம் சரியாயிடும். நமக்கு இந்த ஒரு குழந்தையே போதும், இனிமேல் பெத்துக்க வேண்டாம்&#8230; கவலைப்படாதே&#8221; என்று தட்டுத்தடுமாறினேன். பின் ஏதோ ஞாபகம் வந்தவனாக, &#8220;உனக்கு யாரையாவது பயங்கரமா திட்டணும்போல இருந்தா, என்னை திட்டிக்க. நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்&#8221; என்றேன். ம்ஹூம், இப்போது நான் சொல்லும் எதையும் கேட்கும் நிலையில் அவள் இல்லை&#8230;.</p>
<p>&#8220;போய் டாக்டரை கூப்பிடு&#8230; சீக்கிரம்&#8221; என்றாள்.</p>
<p>&#8220;டாக்டர், டாக்டர்&#8230;&#8221; எனக் கூச்சமின்றி கூப்பாடு போட்டேன்.நர்ஸ் வந்து என்னை வலுக்கட்டாயமாய் வெளியே அனுப்ப, அம்மா &#8220;என்ன ஆச்சு, என்ன ஆச்சு&#8221; என்றாள். அதற்குள் டாக்டர் வந்து &#8220;டெலிவரி டைம் ஆயிடுச்சு, இன்னும் அரைமணியில பேபி வந்திடும்&#8221; என்றார். பின் நர்ஸிடம், &#8220;நீ போய் அஷ்வத் டாக்டருக்கு ஃபோன் பண்ணி பத்து நிமிஷத்துல வரச் சொல்லு&#8221; என்றார்.</p>
<p>அஷ்வத் டாக்டர் குழந்தைகள் நிபுணர். மருத்துவத் துறையில் சிறந்திருந்தாலும் மற்ற விஷயங்களில் எனக்கு அவரை அறவே பிடிக்காது. ஆனால், என் அறம் பேணும் நேரமா அது?</p>
<p>லீலாவின் அம்மவிடம் சென்றேன். &#8220;நீங்க லீலாவை பார்த்தீங்களா..&#8221; என்றேன்.</p>
<p>&#8220;போனேனுங்க.. அவ அழுகறதையும் கத்தறதையும் பார்த்தா பயமா இருந்துதுங்க. அதான் உங்க அம்மாகிட்ட போய் நீங்களே பார்த்துக்குங்க அக்கா அப்படீனுட்டு வந்துட்டனுங்க&#8221; என்றார். என் அம்மாவின் அம்மாவாய் இவர் இருந்திருந்தால் அக்கா பிறக்கையில் ஆஸ்பத்திரியை விட்டே ஓடியிருப்பார்.</p>
<p>கைபேசியை எடுக்க அறைக்குச் சென்றேன். உள்ளே லீலாவின் அப்பா இன்னும் தூங்கிக்கொண்டு இருந்தார். <em>மக துடிச்சிகிட்டு இருக்கா.. மனுஷன் இந்தத் தூக்கம் போடறாரே. பேசாம ரூமை வெளியே பூட்டிட்டுப் போயிடலா</em> என யோசித்துக் கொண்டிருக்கையில் என் நினைப்பை உணர்ந்தவராக சடாரென்று எழுந்தார்.</p>
<p>&#8220;வாங்க மாப்ளே, நைட தூங்கலீங்களா&#8230; அதான் நல்லா தூங்கிட்டேன் போல இருக்கு. டாக்டர் என்ன சொன்னாங்க?&#8221;</p>
<p>&#8220;அது&#8230; இன்னும் கொஞ்ச நேரத்தில டெலிவரி ஆயிடும்னு சொல்லி இருக்காங்க&#8221;</p>
<p>அரை மணிக்குப்பின் பிரசவ வார்டிலிருந்து வந்த டாக்டர் நேரே என்னிடம் வந்தார். &#8220;நார்மல் டெலிவரிங்க.. குழந்தையை அஷ்வத் டாக்டர் கொண்டு வருவார்&#8221; என்றார்.</p>
<p>இன்முகத்துடன் &#8220;தேங்க் யூ&#8221; என்றேன். மனம்<em> &#8220;இதுதானா டாக்டர் உங்க நார்மல்&#8230; &#8220;</em> என்று கேட்கத் தூண்டியது.</p>
<p>ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு பிரசவ வார்டின் இரண்டு கதவுகளில் ஒன்றை பாதிமட்டும் திறக்க அஷ்வத் டாக்டர் குழந்தையை உள்ளங்கையில் தாங்கிக் கொண்டு என்னிடம் வந்தார்.</p>
<p>&#8220;கங்கிராஜுலேஷன்ஸ், உங்களுக்குப் பையன் பொறந்திருக்கு&#8221; என உள்ளங்கையை என்முன் நீட்டினார். ஆண் பெண் பேதம் அக்கணம் தெரியவில்லை. என் எல்லா அணுக்களும் இரத்த நாளங்களுக்குள் பரவசத்துடன் ஓடிக்கொண்டிருந்தது.</p>
<p>அதன்பின், ஃபோன் அழைப்புகள். வாழ்த்துக்கள். விசாரிப்புகள் &#8230;</p>
<p>முதலில் அழைத்தது பாலு அண்ணாவை. அவருக்கும் எனக்குமான உறவைச் சுருக்கமாய் சொல்வதென்றால் &#8211; என் உயிர்த்தோழன்.</p>
<p>&#8220;அண்ணா&#8230; சீக்கிரமாய் ஒரு பெண்ணைப் பெத்துக் கொடுங்க.. எத்தனை நாள்தான் என் பையன் சிங்கிளாகவே இருப்பான்&#8221; என்றேன்.</p>
<p>&#8220;டேய்.. இன்னும் ஒரு மணி நேரம் கூட ஆகலைடா&#8221; என்றார்.</p>
<p>பிறகு மாமா, சம்பத், அண்ணா, நண்பர்கள், உற்றார் உறவினர்கள். கைபேசியில் பேசிக்கொண்டிருந்த என் அம்மாவை நான் தன்மையுடன் பார்க்க, &#8220;எனக்கு அப்பவே தெரியும், பையன் பொறப்பான்னு சொல்லும்போதெல்லாம் மாகாளியாத்தா கோயில்ல மணி அடிக்கும்&#8221; என்று புளகாங்கிதம் அடைய, எனக்குக் கருணை போய் கோபம் பீறிட்டது.</p>
<p>&#8220;அம்மா, இன்னொரு வாட்டி பையன் பொறந்திருக்கான்னு பெருமை பேசிட்டிருந்தே, நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்&#8221;</p>
<p>&#8220;ஆ ஆ&#8230; சரி சரி&#8221;</p>
<p>இடையில் அக்கா அழைத்து, &#8220;தம்பி, மாப்பிள்ளையோட சொந்தக்காரங்களுக்கும் சொல்லிடு&#8221; என்றாள்.</p>
<p>&#8220;அதான் நீயே சொல்லியிருப்பியே, அப்பறம் என்ன?&#8221;</p>
<p>&#8220;இருந்தாலும் நீ கூப்பிடலீனா நல்லா இருக்காதுல்ல. ப்ளீஸ் தம்பி&#8221; என்றாள். என் பொறுமையை சோதித்துக் கொள்ள இன்னொரு சந்தர்ப்பம். அவர்களில் ஒருவரைக் கூப்பிட்டேன்.</p>
<p>&#8220;ஹலோ, நான் ஜெகதீஷ் பேசறங்க&#8230; &#8220;</p>
<p>&#8220;சொல்லு ஜெகதீசு, ஹாஸ்பிடல்லயா இருக்கே&#8221;</p>
<p>&#8220;ஆமாங்க. லீலாவுக்கு பையன் பொறந்திருக்கானுங்க&#8230;&#8221;</p>
<p>&#8220;ஜெயந்தி இப்பதான் கூப்பிட்டு சொன்னாப்டி.. நாங்க சாயந்திரம் கிளம்பி கோவை மெடிக்கலுக்கு வந்திர்றோம்&#8221;</p>
<p>&#8220;சரிங்க&#8230; வீட்ல எல்லார்கிட்டயும் சொல்லிடுங்க, அண்ணனையும் கூட்டிட்டு வந்திருங்க&#8230;&#8221;</p>
<p>&#8220;கண்டிப்பா வந்தர்றோம் ஜெகதீசு&#8230; சரி வச்சிருட்டுமா&#8230; &#8220;</p>
<p>சரி என்றவன், &#8220;ஏங்க ஒரு நிமிஷம்&#8221; என்று சொல்ல எதிர்ப்பக்கம் அழைப்பைத் துண்டிக்காமல் பக்கத்தில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவது அப்பட்டமாய்க் கேட்டது.</p>
<p>&#8220;ஏனுங்க.. இப்பத்தான ஜெயந்தி கூப்பிட்டா, அதுக்குள்ள பாருங்க. ஜெகதீசும் கூப்பிட்டாச்சு.. பையன் பொறந்தா பாருங்க எத்தனை பேரு கூப்பிட்டு கூப்பிட்டு சொல்றாங்கன்னு&#8230;&#8221;</p>
<p>&#8220;அப்படி எல்லாம் இருக்காதுடி.. ஜெகதீஸ் அப்படி எல்லாம் நினைக்க மாட்டான்&#8221; என்றார் அவர் கணவர்.</p>
<p>&#8221; ம்ம்ம்&#8230; இதுவே புள்ளையா இருந்திருந்தா கண்டிப்பா கூப்பிட்டு இருக்க மாட்டாங்க&#8221;</p>
<p>&#8220;நீ முதல்ல லைன கட் பண்ணியான்னு செக் பண்ணு, அதுல லைட் எரியறா மாதிரி இருக்கு.&#8221;</p>
<p>இரண்டாவ்து நொடியில் இணைப்பு துண்டிக்கப்பட்டது.</p>
<p>கோபமும் ஆத்திரமும் பரிதாபமும் ஒருசேர வந்தது. Hell with you என்று நினைத்துக் கொண்டேன். நான் அமைதியாக இருப்பேன். இல்லை ஆத்திரமாய்த் திரிவேன். அனுசரனை எனக்கு அவ்வளவு பழக்கமல்ல.<em> &#8220;சரி விடு, இந்த அழைப்பே என் பொறுமையை சோதிக்கத்தானே</em> <em>&#8220;</em> என்றெண்ணி அமைதியானேன்.</p>
<p><strong>***</strong></p>
<p>பையனுக்கு என்ன பெயர் வைப்பது என்று மொத்த குடும்பமே கொஞ்சம் குழம்பிப் போய் இருந்தது. நான் உள்பட. திரும்பவும் சச்சின், கமல், &#8230;. என சிந்தனைகள். இம்முறை deadline-உடன்.</p>
<p>லீலாவைக் கூப்பிட்டு, &#8220;இத பாரு. பேரு நீங்களே ஃபில்டர் பண்ணி குடுங்க. அதுல ஒண்ண நான் செலக்ட் பண்றேன். ஆனா மூணு கண்டிஷன். முதல் கண்டிஷன் &#8211; சாமி பேரா இருக்கக் கூடாது. ரெண்டாவது &#8211; அந்தப் பேர்ல ஒரு அர்த்தம்/ரிதம் இருக்கணும், மூணாவது &#8211; தமிழ்ப் பேரா இருக்கணும்.&#8221;</p>
<p>ஓ.கே. என்றுவிட்டு சில பெயர்கள் கண்டிஷனுடனும், பல பெயர்கள் முன்னுக்குப் பிறனாகவும்  சொன்னார்கள். கதிர், கதிர்மதியன், மதிர்கதியன், அமுதன், கதிர்வாணன், பரத், க்ரிஷ், ப்ரனேஷ், blah blah blah&#8230; ஜெயமோகன் சொன்னதைப் போல டணால், டுமீல் &#8211; இந்த ரெண்டு மட்டும்தான் இல்லை. ம்ஹும், அவர்கள் சொன்ன எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை.</p>
<p>&#8220;பேருக்கு அர்த்தமெல்லாம் கேட்காதடா.. எனக்கு அதெல்லாம் தெரியாது. எனக்கே ஃபர்ஸ்ட் என் பேரு பிடிக்கலை. லீலாவதின்னா ரொம்ப பழைய பேரா இருக்கு. எதுக்குப்பா அப்படி வச்சீங்கன்னு எங்கப்பா கிட்ட ஃபீல் பண்ணி சொல்லிட்டு இருப்பேன்.. பையனுக்காவது நல்ல பேரா வைக்கனும்ல. எனக்கு A-ல வர்ற பேருதான் பிடிக்கும்&#8221;</p>
<p>&#8220;ஏன் A-ல வர்ற பேரு பிடிக்கும்?&#8221;</p>
<p>&#8220;அதெல்லாம் தெரியாது, ஆனா பிடிக்கும்&#8221;</p>
<p>இது அறியாமையா இல்லை சொல்லாமையா? சத்தியமாய்ப் புரியவில்லை. ஆனால் நான் கண்ட பெரும்பாலான பெண்கள் இவ்வகையறாக்களே.</p>
<p>இளமாறன், பிரபாகரன், திலீபன் &#8211; இந்தப் பெயர்கள் எனக்குப் பிடித்திருந்தன. அவர்களுக்குப் பிடிக்கவில்லை. சமாதானம் சொல்லி சம்மதிக்க வைத்திருக்கமுடியும். அப்படிச் செய்ய விரும்பவில்லை.</p>
<p>இடையில் பலப்பல அட்வைசுகள்.</p>
<p>&#8220;ராம்நகர்-ல நமக்குத் தெரிஞ்ச ஒரு Numerlogist இருக்காரு. மூவாயிரம் குடுத்தா போதும், சூப்பர் சமஸ்கிருதப் பேரா சொல்லிடுவார்&#8221;&#8230;</p>
<p>&#8220;தூய தமிழ்லயே பேரு வைங்க.. ஏன்னா எப்படியும் வரப்போற எலக்ஷன்ல கலைஞர் தான் ஜெயிக்கப்போறாரு&#8230; தமிழ்-ல பேரு வைக்கறவங்களுக்கு சலுகைகள் குடுத்தாலும் குடுப்பாரு. காலேஜ் போறப்ப இதுமாதிரி ஏதாவது உதவும். <em>&#8220;அடப்பாவி, என் பையன் காலேஜ் போற வரைக்குமா கலைஞர் இருக்கப்போறாரு?&#8221;</em></p>
<p>லீலா ஒரு கட்டத்தில் டென்ஷனாகி,  &#8220;போடா, என்னால இதுக்கு மேல முடியாது. நீயே செலக்ட் பண்ணு&#8221; என்றாள்.</p>
<p>குழப்பக்கூடு இப்போது என்னைத் தொற்றிக்கொள்ள திரும்பவும் இணைய வேட்டைகள். தீவிர சிந்தனைகள். தலைவர்கள் பெயர் வைக்க வேண்டும் என்கிற பேரார்வமும் இருந்தது. ஃபிடல் (காஸ்ட்ரோ), (ஷேக்) அப்துல்லா &#8211; இவ்விரு தலைவர்களும் அவர்ளின் பெயர்களும் என்னைக் கவர்ந்திருந்தன.</p>
<p>&#8220;ஃபிடல் இளமாறன் &#8211; பேரு எப்படி&#8221; என்றேன் கர்வத்துடன். பதிலே இல்லை. என்றால், பிடிக்கவில்லை.</p>
<p>&#8220;இதுவும் பிடிக்கலையா? சரி விடு&#8230; எப்ப பேரு வைக்கறீங்க, புதன்கிழமையா? எனக்கு செவ்வாய்க்கிழமை கூப்பிடு. ஒரே ஒரு பெயர் சொல்லுவேன். அது தான் ஃபனல். உங்களுக்குப் பிடிச்சிருந்தாலும் சரி, பிடிக்கலைன்னாலும் சரி.. ஓ.கே-வா&#8221; என்றேன்.</p>
<p>&#8220;ஓ.கே.&#8221; என்றாள்.</p>
<p>பாலு அண்ணாவிடம் பேசினேன். &#8220;அவங்களுக்கு என்ன பேரு பிடிச்சிருக்கோ அதையே வைடா&#8221; என்றார். <em>அதானே</em> என்று தோன்றியது. என் ஃபிலாசபியை அவர்கள் மீது ஏன் திணிக்க வேண்டும்&#8230; அவர்களுக்கும் பிடிக்கவேண்டும், எனக்கும் பிடிக்க வேண்டும்.. அன்பிற்காக கொள்கைகளைத் தளர்த்துவது தவறாய்ப் படவில்லை.</p>
<p>உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியின் போது இந்திய அணியின் வண்ணம் கொண்ட டீ-ஷர்ட்டை ஒரு சிறுவன் அணிந்திருந்தான். சச்சின் டெண்டுல்கரின் மகன்&#8230; பெயர் அர்ஜுன்.</p>
<p>அட, அர்ஜுன்.. இந்தப் பெயரின் Phoenetic எவ்வளவு நன்றாயிருக்கிறது. மகாபாரதக் கதையில் நம்பிக்கை இல்லையென்றால் என்ன, அர்ஜுனன் கதாபாத்திரம் நுண்ணிய உணர்வுகளுடையனாகவும் மதிநுட்பம் மிக்கவனாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. 24 ஜேக், தஸ்தாவோஸ்கியின் மிஷ்கின், ஜூனெட்டின் அமெலி, லுக் பெசனின் மத்தில்டா எல்லாமே கதாபாத்திரங்கள் தானே. இதையெல்லாம் தாண்டி என் குடும்பத்திற்கு இந்தப்பெயர் நிச்சயம் பிடிக்கும். தவிர, A-வில் வேறு ஆரம்பிக்கிறது.</p>
<p>அப்பெயரே முடிவானது. பெயர் சூட்டும் நாளன்று அர்ஜுனை எங்களூர் மாகாளியம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்று, அங்கிருந்த அர்ச்சகர் என்னைக் கைபேசியில் அழைக்க, கலிஃபோர்னியாவில் இருந்து நான் &#8220;அர்ஜுன்&#8230; அர்ஜுன்&#8230; அர்ஜுன்&#8230;&#8221; என மூன்று முறை ஒலிக்க திருநாமப் படலம் செவ்வனே முடிவுற்றது.</p>
<p>நான் தமிழுக்கு துரோகம் இழைத்து விட்டதாகவும், வட நாட்டுக் கடவுளின் சூட்டியதாகவும் என் நெருங்கிய நண்பர்கள் சிலர் கோபப்பட்டனர். எனக்கும் தமிழ்ப் பற்று உண்டு. அதைப் பெயரில் பறைசாற்றுவது மிக அவசியம் என்று நினைக்கவில்லை. நான் எந்தவொரு கருத்தியலுக்கும் முழுமையான சார்பாளன் அல்ல. அப்படி இருக்கவும் விரும்பவில்லை. நான் குருவாக மதிக்கும் ஜெயமோகனின் கருத்துக்களைக் கூட என்னால் முழுமையாக ஏற்க முடியவில்லை. அதனாலேயே கொடி பிடிக்காத கம்யூனிஸ்ட், கருப்புச் சட்டை அணியாத நாத்திகன் என்றிருக்கிறேன். I am agnostic towards all unknowns in the world &#8230;</p>
<p>பார்த்தீர்களா, மீண்டும் என் புராணம் பாட ஆரம்பிக்கிறேன். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு டி.ஆர். குடியிருக்கிறார் போல.</p>
<p>அர்ஜுனுக்கு நான்கு மாதங்களாகிறது. இரண்டு மாதமாய் இருக்கும் போது அமெரிக்கா வந்து விட்டேன். இன்னும் ஒரு மாதம் கழித்தே இந்தியா செல்ல முடியும்.</p>
<p>&#8220;இன்னும் ஐந்து வருடம் கழித்து நீ என்னவாய் இருக்க ஆசைப்படுகிறாய்&#8221; என்று அலுவலகத்தில் வழக்கம்போல் ஒரு கேள்வி வந்தது. யோசித்துப் பார்த்தால், &#8220;லீலாவை ஒரு உருப்படியான டாக்டராக்கி விட்டு, நான் ஐ.டி. தொழிலை விட்டு விட்டு, பாலு அண்ணாவுடனும், அர்ஜுனுடனும் அதிக நேரம் செலவழிக்க விரும்புகிறேன்&#8221; என்பதே ஆத்மார்த்தமான உண்மை.</p>
<p><strong>[முற்றும்]</strong></p>
<br />Filed under: <a href='http://jaggybala.wordpress.com/category/%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/'>அனுபவம்</a>, <a href='http://jaggybala.wordpress.com/category/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/'>கலாச்சாரம்</a>, <a href='http://jaggybala.wordpress.com/category/%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/'>சுயபுராணம்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/jaggybala.wordpress.com/1190/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/jaggybala.wordpress.com/1190/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/jaggybala.wordpress.com/1190/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/jaggybala.wordpress.com/1190/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/jaggybala.wordpress.com/1190/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/jaggybala.wordpress.com/1190/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/jaggybala.wordpress.com/1190/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/jaggybala.wordpress.com/1190/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/jaggybala.wordpress.com/1190/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/jaggybala.wordpress.com/1190/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/jaggybala.wordpress.com/1190/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/jaggybala.wordpress.com/1190/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/jaggybala.wordpress.com/1190/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/jaggybala.wordpress.com/1190/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=jaggybala.wordpress.com&amp;blog=6602267&amp;post=1190&amp;subd=jaggybala&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://jaggybala.wordpress.com/2011/07/29/name/feed/</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f6b0bf2d79043430f05cf8b6d1866dc8?s=96&#38;d=http%3A%2F%2F1.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96" medium="image">
			<media:title type="html">jaggybala</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>குடும்ப விளக்கு</title>
		<link>http://jaggybala.wordpress.com/2010/07/07/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/</link>
		<comments>http://jaggybala.wordpress.com/2010/07/07/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/#comments</comments>
		<pubDate>Wed, 07 Jul 2010 14:24:16 +0000</pubDate>
		<dc:creator>jaggybala</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.jaggybala.com/?p=1135</guid>
		<description><![CDATA[மூன்று மாதங்களாகிறது, என் இணையதளத்தை நான் பார்வையிட்டு. மூன்று வாரங்களாகிறது, என் மடிக்கணிணியை இயக்கி. &#8220;வாழ்க்கை எப்படி இருக்கிறது?&#8221; என எனக்கு நானே கேட்டுக்கொள்ளும் பருவத்தில் இருக்கிறேன். நீ&#8230;..ண்ட இடைவெளிக்குப் பின் சென்னையில் குடும்பம் சகிதமாய் வசிக்க ஆரம்பித்திருக்கிறேன். வேளச்சேரியின் பிரதான் சாலையில் இருந்து இருநூறு மீட்டர் உள்ளே ஒரு அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது. வீட்டைகச் சுற்றிலும் பெரும்பாலும் அறிவியலாளர்கள் அல்லது பொருளாதார வல்லுநர்கள். இப்போதெல்லாம் சென்னையிலும் அடிக்கடி மின்வெட்டு இருக்கிறது. ஆனால் எங்கள் வீட்டின் இடது [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=jaggybala.wordpress.com&amp;blog=6602267&amp;post=1137&amp;subd=jaggybala&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>மூன்று மாதங்களாகிறது, என் இணையதளத்தை நான் பார்வையிட்டு. மூன்று வாரங்களாகிறது, என் மடிக்கணிணியை இயக்கி.</p>
<p>&#8220;வாழ்க்கை எப்படி இருக்கிறது?&#8221; என எனக்கு நானே கேட்டுக்கொள்ளும் பருவத்தில் இருக்கிறேன். நீ&#8230;..ண்ட இடைவெளிக்குப் பின் சென்னையில் குடும்பம் சகிதமாய் வசிக்க ஆரம்பித்திருக்கிறேன். வேளச்சேரியின் பிரதான் சாலையில் இருந்து இருநூறு மீட்டர் உள்ளே ஒரு அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது. வீட்டைகச் சுற்றிலும் பெரும்பாலும் அறிவியலாளர்கள் அல்லது  பொருளாதார வல்லுநர்கள்.</p>
<p>இப்போதெல்லாம் சென்னையிலும் அடிக்கடி மின்வெட்டு இருக்கிறது. ஆனால் எங்கள் வீட்டின் இடது புறம் அமைந்துள்ள ஒரு வீட்டில் மட்டும் எப்போதுமே மின்வெட்டு இருந்ததில்லை. எங்கள் வீட்டு கேட்டும் அந்த கேட்டும் எதிரெதிரே இருக்கிறது. ஒரு நாள் எங்கள் வீட்டு கேட்டின் முன் நான் காரை நிறுந்த அந்த வீட்டில் இருந்து, &#8220;சார், காரை ஓரமா நிப்பாட்டுங்க&#8221; என்றார் ஒருவர். எனக்கு சுர்ரென்று கோபம் வந்தது. அதே, &#8220;சார், காரை கொஞ்சம் ஓரமா நிப்பாட்டிக்கறீங்களா&#8221; என்று கேட்டிருந்தால் அது மரியாதை. &#8220;முடியாது, எங்க வீட்டு கேட் முன்னாடிதான் நிறுத்தியிருக்கேன்&#8221; என்று சொல்லி மூஞ்சியைக் காட்டலாமா என ஒரு கணம் யோசித்து பிறகு வேண்டாமென முடிவெடுத்து காரை ஓரமாக நிறுத்திவிட்டேன். பின்னர் கேள்விப்பட்டேன், அந்த வீடு துணை (மற்றும் எதிர்கால) முதல்வரின் சில பல‌ வீடுகளில் ஒன்றாம். அவர் இப்போது இங்கில்லை, டிரைவர்தான் வீட்டைப் பார்த்துக் கொள்கிறாராம். எப்போதாவது வந்து செல்வார் என்று பேச்சு. எனவே, நான் இருக்கும் இடத்தில் பேரமைதியும் உண்டு, பேராபத்தும் உண்டு. என் முந்திரிக் கோபத்தை கொஞ்சம் அடக்கி வைக்க வேண்டும்.</p>
<p>புது வீட்டிற்கு டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், சோஃபா, etc. என ஒரு இலட்சத்திற்கும் மேல் செலவானது. அத்தனையும் மாமனார் பணம். சம்மட்டியால் அடித்தது போலிருந்தது. என்ன&#8230; அதில் &#8220;அப்படித்தான் அடிப்பேன்&#8221; என்கிற அன்பும் ஆதங்கமும் கலந்திருந்தது. பேசாமல் வாங்கிக் கொண்டேன். ரொம்ப மோசமாய் என்னை நானே பல முறை செருப்பால் அடித்துக் கொண்ட காலமுண்டு.</p>
<p>அம்மா, அக்கா, மாமா, அண்ணன், மாமனார், மாமியார், சித்தி, நண்பர்கள் என  எங்களைக் குடியமர்த்த கும்பல் கும்பலாய் வந்து போனார்கள். சிலர் வார இறுதி நாட்களில் வந்து செல்கின்றனர். லீலா சமையல் பழகும் வரை யாராவது ஒரு ஆள் எப்போதும் இருக்கட்டும் என்றனர். எனக்கென்னவோ, அவர்களை விட லீலா நன்றாக சமைக்கிறாள் என்று எண்ணம்.</p>
<p>இரண்டு வருடங்களுக்கும் மேல் சென்னையில் இருந்தும் கேளிக்கைக்கென வெளியே செல்வது இரண்டு காரியங்கள்தாம்: சினிமா மற்றும் சாப்பாடு.  அம்மா அக்கா எல்லோரையும் சென்னையின் புறநகர் சுற்றுலாத் தளங்களுக்கு அழைத்துச் சென்றேன். இணையத்தில் தேடிப் பிடித்துச் சில இடங்கள் மட்டும் சென்றோம்: சத்யம் திரையரங்கில் அவதார்-3D, வண்டலூர் விலங்குகள் சரணாலயம், அங்கிருந்து தக்ஷின்சித்ரா, முதலைகள் சரணாலயம், மற்றும் கோவளம் கடற்கரை. அதில் தக்ஷின்சித்ரா மட்டும் கட்டாயம் பார்க்க வேண்டிய தலம்.</p>
<p>கடந்த மூன்று வாரங்களாய் நான், லீலா மற்றும் மகேஷ் மட்டுமே. மகேஷ், லீலாவின் அண்ணன். படிக்கும் போதும் பேசும் போதும் லீலா ஒரு அவசரக் குடுக்கை. &#8220;அடையார் ஆனந்த பவன்&#8221; என்பதை &#8220;அய்யார் ஆனந்த பவன்&#8221; என்றுதான் சொல்லுவாள். அவ்வாறே &#8220;பிரியாணி&#8221; என்பது &#8220;பிய்யானி&#8221;‍ ஆகவும், &#8220;ஏர்டெல்&#8221; என்பது &#8220;ஏடல்&#8221; ஆகவும், &#8220;திருநெல்வேலி&#8221; என்பது &#8220;தின்னவேலி&#8221; ஆகவும் மரூஉ ஆனது. அத்துடன் அவளே ஒரு நாள், &#8220;டேய், நீ நெனைக்கிற மாதிரி இல்லைடா. நான் கொஞ்சம் தான் லூசு&#8221; என என்னிடம் சுய சான்றிதழ் கொடுத்திருக்கிறாள். உண்மையில், நான் மையல் கொண்ட எல்லா பெண்களுமே கொஞ்சமேனும் லூசாய்த்தான் இருந்தார்கள். எல்லோருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு, அனைவருமே பயங்கரமாய் படிப்பார்கள். கன்னா பின்னாவென்று மார்க் வாங்குவார்கள். எப்போதும் நம்பர் ஒன்.</p>
<p>நிற்க.</p>
<p>சென்ற வாரம் சான்றிதழ் பெறுவதற்காக லீலாவும் மகேஷும் தஞ்சாவூருக்குச்  சென்றிருந்தார்கள். திரும்பி வருகையில் தாம்பரம் இரயில் நிலையத்தில் இறங்கி  வெளியே வந்திருக்கிறார்கள். வழியில் &#8220;Suburban Traffic Police&#8221; என்று ஒரு  இடத்தில் பலகை இருந்திருக்கிறது. அதை வழக்கம் போல டாப் கியரில் &#8220;Subramani Traffic Police&#8221; என படித்துக் கொண்டு , &#8220;பரவாயில்லையே&#8230; இங்க நிக்கற‌ போலீஸ் பேரெல்லாம் போர்டில் எழுதி வச்சிருக்காங்க&#8221; என்று நினைத்து கொண்டதுடன் நிற்காமல், சுப்ரமணி அருகில் நிற்கிறாரா என சுற்றும் முற்றும் பார்த்திருக்கிறாள். யாரையும் காணாததால், மீண்டும் ஒரு முறை போர்டைப் பார்த்துப் பின் தனக்குள் சிரித்துக் கொண்டாளாம்.</p>
<p>இப்படித்தான் சென்ற வாரத்தில் ஒரு நாள் இரவு ஸ்பெய்னுக்கும் ஸ்விட்சர்லாந்துக்கும் கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்தது. நான், மகேஷ், லீலா &#8211; மூவரும் பார்த்துக் கொண்டிருந்தோம். போட்டி நடுவே ஒரு ஸ்பெய்ன் வீரருக்கு சப்ஸ்டிடியூட் வர, &#8220;ஏங்க அவன் போறான்?&#8221; என்றாள். &#8220;ஏய்.. என்னடி மேட்ச் பார்க்கிறே? கமெண்டரில சொன்னாங்க இல்ல.. அவங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு ஃபோன் வந்துச்சாம். அதான் போறான்&#8221; என்றேன். &#8220;அப்படியெல்லாம் போலாமா?&#8221; என்றாள் முட்டைக் கண்ணை அகல விரித்து.</p>
<p>போட்டியின் முதல் பாதி முடிந்ததும், நான் தூங்கச் செல்ல திடீரென ஒரு சந்தேகம் வந்து அவளை அழைத்தேன். &#8220;லீலா&#8230; மகேஷ் ஃபுட்பால் மேட்ச் பார்த்துட்டு இருக்கான். நீ போய் யாரு ஃபீல்டிங்‍னு கேட்டுட்டு வர்றியா?&#8221; என்றேன். நல்லவளைப் போல‌ மண்டையை இரண்டு முறை ஆட்டி விட்டு மகேஷைக் கேட்கச் சென்றாள். நான் அடக்க முடியாமல் சிரித்ததைப் பார்த்து நிறைய நேரம் யோசித்து பின், &#8220;டேய்&#8230; ஃபுட்பால்ல ஃபீல்டிங் இல்லைனு எனக்குத் தெரிஞ்சு போச்சு&#8221; என்ற உண்மையைக் கண்டறிந்து அடிக்க வந்தாள். பெண்களின் பொய்க் கோபம் எப்போதுமே பேரழகு.</p>
<p>நானெல்லாம் சும்மாவே படு சோம்பேறி. இவள் இப்படியிருந்தால் வீணாய்ப் போய்விடுவேன், இப்போதே எழுபத்தைந்தைத் தாண்டி விட்டது என் எடை. &#8220;ஒரு டாக்டரை வீணாக்கிடாதடா&#8230;&#8221; என்று மனம் அடிக்கடி ரிமைண்டர் கொடுக்கிறது. ஒன்றிரண்டு மாதங்களில் அவளை படிப்புக்கோ பணிக்கோ அடித்துத் துரத்த வேண்டும், அது வரை அவள் நகர்வது போல தெரியவில்லை.</p>
<p>இரண்டு வருடங்களுக்கு முன் பாரதிதாசனின் &#8220;குடும்ப விளக்கு&#8221; படித்திருக்கிறேன். பயங்கர போராக இருந்தது. இப்படியெல்லாம் ஒரு பெண் இருக்க முடியுமா என்று சிரித்துக்கொண்டேன். முடியும் போல் தான் இருக்கிறது.</p>
<p>இதையெல்லாம் வைத்து குடும்ப விளக்கா என்று அனுமானிக்காதீர்கள். உண்மையில், அன்பும் அறனும் உடைத்தவள் அவள். கைபேசியில் என்னிடம் ஐந்து நிமிடத்திற்கும் குறைவாகத் தான் பேசுவாள், அதற்கு மேல் பேசினால் கடித்து விடுகிறேன். என் அம்மாவிடம் குறைந்தது அரை மணி நேரம் பேசுவாள். இதைவிட ஓர் ஆணுக்கு என்ன வேண்டும்? மேலும்&#8230;.. வேண்டாம், எழுத ஆரம்பித்தால் ஒன்று உங்களுக்கு வெறுப்பேறும் அல்லது ஓவரா வழியறான் என்று நினைக்கக் கூடும். இருந்தாலும், இந்தக் கடைசி பத்தியை எழுத அனுமதித்த இந்த பாழாய்ப் போன மனசு வாயைத் திறந்து அன்பாகப் பேச மட்டும் அனுமதி மறுக்கிறது.</p>
<br />Filed under: <a href='http://jaggybala.wordpress.com/category/%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/'>அனுபவம்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/jaggybala.wordpress.com/1137/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/jaggybala.wordpress.com/1137/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/jaggybala.wordpress.com/1137/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/jaggybala.wordpress.com/1137/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/jaggybala.wordpress.com/1137/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/jaggybala.wordpress.com/1137/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/jaggybala.wordpress.com/1137/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/jaggybala.wordpress.com/1137/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/jaggybala.wordpress.com/1137/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/jaggybala.wordpress.com/1137/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/jaggybala.wordpress.com/1137/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/jaggybala.wordpress.com/1137/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/jaggybala.wordpress.com/1137/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/jaggybala.wordpress.com/1137/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=jaggybala.wordpress.com&amp;blog=6602267&amp;post=1137&amp;subd=jaggybala&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://jaggybala.wordpress.com/2010/07/07/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f6b0bf2d79043430f05cf8b6d1866dc8?s=96&#38;d=http%3A%2F%2F1.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96" medium="image">
			<media:title type="html">jaggybala</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தனித் தளம்</title>
		<link>http://jaggybala.wordpress.com/2010/04/10/%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://jaggybala.wordpress.com/2010/04/10/%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sat, 10 Apr 2010 20:28:19 +0000</pubDate>
		<dc:creator>jaggybala</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[சுயபுராணம்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[Jagadeesan Balakrishnan]]></category>

		<guid isPermaLink="false">http://jaggybala.wordpress.com/?p=1124</guid>
		<description><![CDATA[வணக்கம். மனதில் பட்டதை சட்டென சொல்லிவிடுபவர்கள் பட்டியலில் நான் சத்தியமாக இல்லை, தண்ணி அடிக்கும்போதும் எழுதும்போதும் தவிர்த்து. என்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும் ஓம்குமார் அப்பட்டியலின் முதல்வரிசையில் இருப்பார். என் தளத்தைக் கூர்ந்து கவனிப்பவர். இருந்தாலும் நல்ல திறமைசாலி, புத்திசாலி! சென்ற வாரத்தில் ஒரு நாள் மதியம் சாப்பிட்டு முடித்து என் கணிணிமுன் அமர்ந்தவர் அவர் தளத்தின் (http://www.9th-direction.com/) மேம்பாடுகளைச் செய்து கொண்டே Jaggybala.com என்றொரு தளம் உபயோகத்தில் உள்ளதா என்று பார்த்தார். &#8220;சும்மா இருங்க ஓம்&#8221; என்று [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=jaggybala.wordpress.com&amp;blog=6602267&amp;post=1124&amp;subd=jaggybala&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>வணக்கம்.</p>
<p>மனதில் பட்டதை சட்டென சொல்லிவிடுபவர்கள் பட்டியலில் நான் சத்தியமாக இல்லை, தண்ணி அடிக்கும்போதும் எழுதும்போதும் தவிர்த்து. என்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும் ஓம்குமார் அப்பட்டியலின் முதல்வரிசையில் இருப்பார். என் தளத்தைக் கூர்ந்து கவனிப்பவர். இருந்தாலும் நல்ல திறமைசாலி, புத்திசாலி!</p>
<p>சென்ற வாரத்தில் ஒரு நாள் மதியம் சாப்பிட்டு முடித்து என் கணிணிமுன் அமர்ந்தவர் அவர் தளத்தின் (http://www.9th-direction.com/) மேம்பாடுகளைச் செய்து கொண்டே Jaggybala.com என்றொரு தளம் உபயோகத்தில் உள்ளதா என்று பார்த்தார். &#8220;சும்மா இருங்க ஓம்&#8221; என்று சொல்லி அருகிலுள்ள பாட்டிலைத் திறந்து தண்ணீர் குடித்தேன். அதைக் கீழே வைப்பதற்குள் அத்தளத்தை வாங்கி, அதில் வோர்ட்ப்ரஸ்ஸை இன்ஸ்டால் செய்து கான்ஃபிகரேகஷனையும் முடித்து விட்டார்.</p>
<p>இரண்டு மாதங்களாய் வேலை பளு அதிகமிருப்பினும் என் சோம்பேறித்தனத்தையும் அக்கறையின்மையையும் சத்தியமாக ஒத்துக்கொள்கிறேன். பொன்னா (விஜய்) என்கிற ஒரு அன்பர் என் எழுத்துக்களைப் பற்றிய அவர் விமர்சனத்தையும் எண்ணங்களையும் பற்றி அடிக்கடி மின்னஞ்சல் அனுப்புபவர். அவர் கைபேசி எண்ணை வாங்கி முன்று மாதங்களாகியும் இன்றுவரை ஒரு முறை கூட அழைக்கவில்லை. இவ்வாறே பெரும்பாலான நண்பர்களிடமும், ஏன்.. மனைவியிடமும் கூட இருக்கிறேன். எனக்கு நினைவு தெரிந்து என் மனைவியை &#8220;சும்மா&#8221; பேச கைபேசியில் அழைத்து கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் இருக்கும். இத்தனைக்கும் அவள் தஞ்சாவூரில். நான் சென்னையில். இன்னும் இரண்டு வாரங்கள் கழித்துத்தான் நான் &#8220;முழு நேர குடும்பஸ்தன்&#8221; ஆகப் போகிறேன்.</p>
<p>கூப்பிடக்கூடாது என்றில்லை. ஒரு மாதிரி குணம் என்று வைத்துக்கொள்ளுங்களேன், ஆனால் நிச்சயமாக அது திமிரல்ல. தவறென்று தெரியும், ஏதேனும் செய் என்று என் மனம் இன்னும் முழுமையாகக் கட்டளையிடவில்லை. என்னைப் பற்றித் தெரிந்தவர்கள் என்னுடன் இருந்தால் போதும் என்கிற குறுகிய இறுமாப்புடன் இருக்கிறேன். லீலா, நித்தியானந்த், சம்பத், பொன்னா&#8230; என் மற்ற நண்பர்களே, பிழையாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீதான என் அன்பு உண்மையில் அலாதியானது.</p>
<p>இனி என் தளம் <a href="http://www.jaggybala.com/" target="_self">http://www.jaggybala.com/</a> என்னும் முகவரியில் இயங்கும்.</p>
<p>நன்றி.</p>
<br />Filed under: <a href='http://jaggybala.wordpress.com/category/%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/'>அனுபவம்</a>, <a href='http://jaggybala.wordpress.com/category/%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/'>சுயபுராணம்</a>, <a href='http://jaggybala.wordpress.com/category/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81/'>பொது</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/jaggybala.wordpress.com/1124/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/jaggybala.wordpress.com/1124/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/jaggybala.wordpress.com/1124/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/jaggybala.wordpress.com/1124/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/jaggybala.wordpress.com/1124/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/jaggybala.wordpress.com/1124/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/jaggybala.wordpress.com/1124/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/jaggybala.wordpress.com/1124/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/jaggybala.wordpress.com/1124/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/jaggybala.wordpress.com/1124/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/jaggybala.wordpress.com/1124/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/jaggybala.wordpress.com/1124/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/jaggybala.wordpress.com/1124/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/jaggybala.wordpress.com/1124/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=jaggybala.wordpress.com&amp;blog=6602267&amp;post=1124&amp;subd=jaggybala&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://jaggybala.wordpress.com/2010/04/10/%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f6b0bf2d79043430f05cf8b6d1866dc8?s=96&#38;d=http%3A%2F%2F1.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96" medium="image">
			<media:title type="html">jaggybala</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அப்பா</title>
		<link>http://jaggybala.wordpress.com/2010/02/28/feb-28/</link>
		<comments>http://jaggybala.wordpress.com/2010/02/28/feb-28/#comments</comments>
		<pubDate>Sun, 28 Feb 2010 16:45:41 +0000</pubDate>
		<dc:creator>jaggybala</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[சுயபுராணம்]]></category>
		<category><![CDATA[அப்பா]]></category>
		<category><![CDATA[பள்ளி]]></category>
		<category><![CDATA[வலி]]></category>

		<guid isPermaLink="false">http://jaggybala.wordpress.com/?p=1082</guid>
		<description><![CDATA[28-Feb-1992: வெள்ளிக்கிழமை நான் ஆறாவது படித்துக் கொண்டிருக்கிறேன். வெள்ளிக்கிழமை எனக்கு உற்சாகமான நாள். பள்ளியில் அன்று எங்களுக்கு P.T (விளையாட்டு) வகுப்பு உண்டு. சனி, ஞாயிறு என அடுத்த இரு நாட்கள் பள்ளி விடுமுறையும் கூட. புஷ்பா தியேட்டரில் எம்.ஜி.ஆர் நடித்த &#8220;ஆயிரத்தில் ஒருவன்&#8221; படம் ஓடுகிறது. எப்படியும் நானும் அப்பாவும் ஞாயிற்றுக்கிழமை பார்த்து விடுவோம் என்கிற குஷி. முந்தின நாள் இரவுதான் &#8220;சின்ன கவுண்டர்&#8221; திரைப்படத்தை இரண்டாம் முறையாகப் பார்த்து விட்டு வந்திருந்தோம். நினைவு தெரிந்த [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=jaggybala.wordpress.com&amp;blog=6602267&amp;post=1082&amp;subd=jaggybala&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>28-Feb-1992: வெள்ளிக்கிழமை</strong></p>
<p>நான் ஆறாவது படித்துக் கொண்டிருக்கிறேன். வெள்ளிக்கிழமை எனக்கு உற்சாகமான நாள். பள்ளியில் அன்று எங்களுக்கு P.T (விளையாட்டு) வகுப்பு உண்டு. சனி, ஞாயிறு என அடுத்த இரு நாட்கள் பள்ளி விடுமுறையும் கூட. புஷ்பா தியேட்டரில் எம்.ஜி.ஆர் நடித்த &#8220;ஆயிரத்தில் ஒருவன்&#8221; படம் ஓடுகிறது. எப்படியும் நானும் அப்பாவும் ஞாயிற்றுக்கிழமை பார்த்து விடுவோம் என்கிற குஷி.</p>
<p>முந்தின நாள் இரவுதான் &#8220;சின்ன கவுண்டர்&#8221; திரைப்படத்தை இரண்டாம் முறையாகப் பார்த்து விட்டு வந்திருந்தோம். நினைவு தெரிந்த நாள் முதல் நான் சினிமா பைத்தியம். இப்போது வேண்டுமானால் &#8220;நல்ல சினிமா&#8221; பைத்தியம் என்று வைத்துக்கொள்ளலாம்!</p>
<p>அப்பா எல்லா எம்.ஜி.ஆர். படங்களையும் பார்த்திருக்கிறார். குறைந்தது ஐந்து முறை. அதிகபட்சமாக &#8220;உலகம் சுற்றும் வாலிபன்&#8221; படத்தை நூற்றைம்பது முறைக்கும் மேல் பார்த்திருக்கிறார். ஆறாவதுடன் படிப்பை நிறுத்திய அப்பா, தாத்தாவின் அச்சுப்பட்டறையில் வேலை பழக ஆரம்பித்தார். அப்பாவிற்கு ஒரு அண்ணன். தாத்தாவிற்கு பயந்து ஒரு நாள் அவர் விஷம் குடித்து இறந்து விட்டார். அன்றிலிருந்து அப்பாவிற்கு ஏக செல்லம்.</p>
<p>தினமும் காலை எம்.ஜி.ஆர். படம் பார்த்து விட்டு, வீடு வந்து சாப்பிட்டு தூங்கி எழுந்து மீண்டும் அதே படத்திற்கு பகல் காட்சியும் செல்வார். மாலை முதல் இரவு வரை எம்.ஜி.ஆர் புராணம் பேசிக்கொண்டே பட்டறையில் வேலை நடக்கும். ஒவ்வொரு நாளும் இதே தொடரும். அப்பாவின் திருமண நாளன்று பெரும்பாலான பரிசுப்பொருட்கள் எம்.ஜி.ஆர் படங்களாய்த்தான் இருந்தன. என்னை வாரமிருமுறை சினிமாவிற்குக் கூட்டிச் செல்வார். ஒன்று &#8211; ஏதாவதொரு புதிய படம். மற்றொன்று, எம்.ஜி.ஆர் படம். எம்.ஜி.ஆர் திரைப்படப் பாடல்களுக்கு இன்றுவரை நான் பரம ரசிகன்.</p>
<p>என் அப்பா ஊருக்கு அப்பாவி. உற்றார் உறவினர் எவரிடம் நான் அறிமுகமானாலும்,  &#8220;பாலு பையனா நீ?&#8221; என்று மோவாயைப் பிடித்துக் கொஞ்சுவார்கள். அடிக்காத அப்பாவைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் வாய் திறந்து ஒரு வார்த்தை திட்டியது கூட கிடையாது. &#8220;படி&#8221; என்று எப்போதும் சொன்னதில்லை. எனக்கும் படிப்பு வேப்பங்காயாய்க் கசந்தது. காலாண்டு அரையாண்டு என ஒன்றில் கூட ஃபுல் பாஸ் ஆகவில்லை. ஒவ்வொரு முறை ஃபெயில் ஆகி வரும் போதும், &#8220;சரி விடு, அடுத்த எக்ஸாம்ல பார்த்துக்கலாம்&#8221; என்பார். முழுப்பரிட்சை நெருங்கிக் கொண்டிருந்தது.</p>
<p>வெள்ளியன்று காலை சாப்பிட்டு முடித்ததும் அம்மா ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து வந்தார். இருந்த இடத்திலேயே கையைக் கழுவிக்கொண்டு எழுந்தேன். அப்பா தயிர் சாதத்தைக் குழைத்து ஒரு பிடி ஊட்டி விட்டார்.</p>
<p>P.T வகுப்பு என்பதால் பச்சை வண்ண உள்ளாடை அணிந்து அதன் மேல் வெள்ளைச் சட்டை உடுத்திவிட்டார்கள். அப்பா அம்மாவிற்கு டாடா சொல்லி பள்ளி கிளம்பியாயிற்று. வழியெங்கும் &#8220;ஆயிரத்தில் ஒருவன்&#8221; படம் பிம்பமாய் ஓடிக்கொண்டிருந்தது. இத்தனைக்கும் அந்தப் படத்தை நான் ஏற்கனவே இரண்டு முறை பார்த்துவிட்டேன். கத்திச் சண்டையை ரசிக்காத சிறுவர்கள் உண்டா?</p>
<p>வகுப்பறைக்குச் சென்று புத்தகப் பையை வைத்து ஒரே ஓட்டமாய் விளையாட்டு மைதானத்திற்குச் சென்றேன். முதல் ஒன்றரை மணி நேரம் விளையாட்டு. ஓடும் வழியில் சட்டையைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டேன்.</p>
<p>கால்பந்து.</p>
<p>பச்சை நிற டீமுக்கும் நீல நிற டீமுக்கும் போட்டி. சட்டையை மர இடுக்கினுள் நுழைத்துவிட்டு விளையாட்டில் மும்முரமானேன். எனக்கு கால்பந்து என்பது எப்போதாவது ஒரு முறை காலுக்கு வரும் பந்து, அவ்வளவுதான். நானும் என்னால் முடிந்த வரை பந்தை நோக்கி ஓடினேன்&#8230; ஓடினேன்&#8230; ஓடிக்கொண்டே இருந்தேன். ம்ஹூம், காலுக்குச் சிக்குவேனா என்று போக்குக் காட்டியது. மைதானத்தை நான்கைந்து முறை சுற்றி வந்ததுதான் மிச்சம். ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியும் பந்து ஒருமுறை கூட என் காலில் படவேயில்லை.</p>
<p>எவனோ ஒருவன் பந்தை வேகமாக அடிக்க அது உயர எழும்பியது. வாயைப் பிளந்தபடி வானத்தைப் பார்த்தேன். அது என்னை நோக்கி வருவது போன்ற பிரம்மை.. இல்லை இல்லை, உண்மை. பந்து என்னை நோக்கித்தான் வருகிறது. கை கால்கள் துறுதுறுவென்றன.</p>
<p>என் காலருகில் பந்து விழ வலது காலைத் தூக்கி ஓங்கி உதைத்தேன். உதைத்த வேகத்தில் காலில் இருந்த ரப்பர் செருப்பு வார் அறுந்து மேலே பறந்தது. பந்து காலில் படாமல், எனக்கு வெகு பின்னே சென்றுவிட்டது. மனம் தளராமல் செருப்பு வாரை மாட்டிக்கொண்டு மீண்டும் இரண்டு முறை மைதானத்தை வலம் வந்தேன்! வேஸ்ட்!!</p>
<p>இன்னும் ஐந்து நிமிடம்தான் இருக்கும், அதோடு P.T. முடிந்து விடும். எப்படியும் பந்து என்னிடம் வரப்போவதில்லை.</p>
<p>சோர்வுடன் மெல்ல நடந்தேன். நண்பன் கௌசிக் அருகில் வந்து, &#8220;டேய் ஜெகதீஸ்.. உன்னை தேடிட்டு அர்ப்புதராஜ் சார் வந்தார்&#8221; என்றான். என்னைத் தேடி &#8220;சார்&#8221; யாராவது வருகிறார்களென்றால் அது என்னை அடிப்பதற்காய் மட்டும்தான் இருக்கும் என்று திடமாக நம்புபவன் நான். கை கால்கள் உதறல் எடுத்தது.</p>
<p>பின்னாலிருந்து ஒரு குரல், &#8220;ஜெகதீஸ்&#8221; என்றது. திரும்பிப் பார்த்தேன். அட்டெண்டர் நாகராஜ் சார். கையைக் கட்டிக்கொண்டு அவர் முன் ஓடிச் சென்று நின்றேன்.</p>
<p>&#8220;சார், சொல்லுங்க சார்&#8221;</p>
<p>&#8220;ஹெட் மாஸ்டர் உன்னை வரச்சொன்னார். அவர் ரூமுக்கு போ&#8221; என்றார்.</p>
<p>&#8220;சார் நான் ஒண்ணுமே பண்ணலியே&#8221;, நா தழுதழுத்தது.</p>
<p>&#8220;டேய், அவர் வேற விஷயமா வரச் சொன்னார். போ&#8221; என்றார்.</p>
<p>எனக்கு நம்பிக்கையில்லை. டி.சி. கொடுத்து அனுப்பி விடுவார்களா? நான் எதுவுமே செய்யவில்லையே! உள்ளம் பதற ஹெட் மாஸ்டர் &#8220;ஜோசப் ஃபெலிக்ஸ்&#8221; அறையை நோக்கிச் சென்றேன். வெளியே நின்றுகொண்டு, &#8220;சார்?&#8221; என்றேன்.</p>
<p>நிமிர்ந்து பார்த்தவர், &#8220;நீதான் ஜெகதீசா?&#8221; என்றார்.</p>
<p>வேகமாக தலையை ஆட்டினேன். எந்நேரமும் அழக்கூடிய சூழ்நிலையில் இருந்தேன்.</p>
<p>&#8220;உள்ளே வா&#8221;, கையை நீட்டி அழைத்தார். அவர் முன் சென்று நின்றேன்.</p>
<p>&#8220;இவரை உனக்குத் தெரியுமா?&#8221; எனக்குப் பின்னால் கையைக் காண்பித்தார்.</p>
<p>பின்னால் திரும்பிப் பார்த்தேன். தங்கராசு மாமா நின்றிருந்தார். எங்கள் வீட்டிற்குப் பின்னால்தான் அவரின் வீடு. அவரிடம் நான் அதிகமாகப் பேசியதில்லை.</p>
<p>தெரியும் என்பது போல் தலையை ஆட்டினேன். நான் ஏதோ பெரும்பிழை செய்து அதைப் போட்டுக்கொடுக்க வந்திருக்கிறார் என்று என் மனம் உறுதியாக நம்பியது.</p>
<p>&#8220;யார் இது?&#8221; என்றார்.</p>
<p>&#8220;பக்கத்து வீட்டுல குடியிருக்கிற அண்ணன்&#8221; என்றேன்.</p>
<p>&#8220;அண்ணனா? இவர் மாமான்னு சொன்னார்?&#8221;</p>
<p>&#8220;சாரி சார்&#8230; சாரி சார்&#8230; மாமாதான்&#8221; என்றேன்.</p>
<p>&#8220;இவர் பேரென்ன?&#8221;</p>
<p>&#8220;தங்கராசு&#8221;</p>
<p>&#8220;சரி. இவர் உன்னை கூட்டிப் போக வந்திருக்கார். இவர் கூட நீ கிளம்பு&#8221;</p>
<p>&#8220;சார், புக்ஸ் எல்லாம் க்ளாஸ்ல இருக்கு&#8221;</p>
<p>&#8220;அதெல்லாம் பரவாயில்ல, நீ கிளம்பு&#8221;</p>
<p>மறு பேச்சு பேசாமல் தலையாட்டி விட்டு மாமாவை நோக்கிச் சென்றேன். இனி பள்ளிக்குள் அனுமதிக்க மாட்டார்களோ என்று என் மனம் அடித்துக்கொண்டது. தங்கராசு மாமா, &#8220;வா போகலாம்&#8221; என்றார். அவர் முகம் வாடியிருந்தது.</p>
<p>இரு சக்கர வாகனத்தில் ஏறிப் பயணித்தோம். பழகாதவர்களிடம் நான் அதிகம் பேசுவதில்லை. பயம். கூச்சம். வெட்கம். அன்று எனக்கு என்னவோ போலிருந்தது. &#8220;மாமா, நம்ம எங்க போறோம்?&#8221; என்றேன். அவர் பதில் சொல்லவில்லை. மீண்டும் ஒரு முறை கேட்டேன். மௌனம்.</p>
<p>வண்டி அரசு மருத்துவமனைக்குள் சென்றது. மரத்தடியின் நிழலில் வண்டியை நிறுத்தினார். கீழிறங்கி சுற்றும் முற்றும் பார்த்தேன். நிறைய மரங்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் மக்கள் கூட்டமாய் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். தங்கராசு மாமா என் தோள்களைப் பற்றிக்கொண்டு, &#8220;போகலாம்&#8221; என்றார்.</p>
<p>அவர் பிடிக்குள் அடக்கமாய் முன் நடந்தேன். தூரத்து மரநிழல் ஒன்றில் கூட்டம் அதிகமாயிருந்தது. அவர்களை நோக்கிச் சென்றோம். அருகில் செல்லச் செல்ல அங்கிருந்த முகங்கள் ஒவ்வொன்றும் பரிச்சயமானதாய்த் தோன்றியது. என்னைக் கண்டவர்கள் எல்லாம் கூக்குரலிட்டனர்.</p>
<p>அந்த கூச்சல் கும்பலுக்கு நடுவே மாமா என்னை அழைத்துச் சென்றார். எல்லோரும் வழி கொடுத்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கூட்டத்தின் நடுவே ஏழெட்டுப் பேர் அமர்ந்து ஓவென்று அழுதுகொண்டிருந்தனர். அதில் தலைவிரிகோலமாய் பைத்தியம் பிடித்ததைப் போல கதறிக்கொண்டிருந்தார் என் அம்மா. என்னைப் பார்த்ததும் மார்பில் அடித்துக்கொண்டு அழுதார்.</p>
<p>வருத்தம், பயம் என இரண்டும் என்னுள் திளைத்திருந்தது. மெல்ல மெல்ல மனம் நிலவரத்தை உணர ஆரம்பித்திருந்தது. கண்களில் வழிந்தோடிய கண்ணீரில் பச்சை நிற உள்ளாடை ஈரமானது.</p>
<p>&#8220;அப்பா&#8230; அப்பா எங்கே?&#8221; என்றேன்.</p>
<p>&#8220;பையன் அப்பாவைக் கேக்கறானே&#8230; நான் எங்க போவேன்?&#8221; என்று அம்மா கதறியழ முழுவதும் புரிந்தது. அலுவலகம் வரும் வழியில் சாலை விபத்துக்கு உள்ளாகி அக்கணமே இறந்து விட்டார்.</p>
<p><strong>***</strong></p>
<p>ஓரிரு மாதங்கள் கண்ணீரிலேயே கறைந்தன. பின் பெரியப்பா, தாத்தா இருவரும் குடும்பத்தைத் தாங்கி நின்றார்கள்.</p>
<p>மூன்றாம் மாதம் நடந்த பள்ளித் தேர்வில் முதன்முறையாய் எல்லா பாடங்களிலும் தேறினேன். பின் பத்தாவது பொதுத் தேர்வில் வகுப்பில் நான்காவதாகவும், பனிரெண்டாவது பொதுத் தேர்வில் பள்ளியில் நான்காவதாகவும் வந்தேன்.</p>
<p>அப்பாவின் வைப்பு நிதியில் சொந்த வீடு கட்டி, அக்கா திருமணம் முடித்து, நான் படிப்பை முடித்து என இப்போது மனநிறைவுடன் செல்கிறது எங்கள் வாழ்க்கை. அறியா வயதில் அப்பா காட்டிய அன்பு மட்டும் அவர் நினைவுகளைத் தூறலாய் தாங்கிக்கொண்டே இருக்கிறது.</p>
<p>இன்றுடன் பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்டது. என் மனைவி கேட்டாள், &#8220;மாமா இறந்த தினத்தில் அவரைப் பற்றி ஒரு நிமிஷமாவது நினைப்பீங்களா?&#8221;</p>
<p>உண்மையில் ஒவ்வொரு நாளும் ஒரு நிமிடமாவது நினைக்கிறேன். அப்பா &#8211; ஒவ்வொருவருக்கும் முதல் ஆசான். முதல் ஹீரோ. முதல் தலைவன்.</p>
<br />Filed under: <a href='http://jaggybala.wordpress.com/category/%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/'>அனுபவம்</a>, <a href='http://jaggybala.wordpress.com/category/%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/'>சுயபுராணம்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/jaggybala.wordpress.com/1082/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/jaggybala.wordpress.com/1082/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/jaggybala.wordpress.com/1082/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/jaggybala.wordpress.com/1082/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/jaggybala.wordpress.com/1082/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/jaggybala.wordpress.com/1082/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/jaggybala.wordpress.com/1082/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/jaggybala.wordpress.com/1082/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/jaggybala.wordpress.com/1082/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/jaggybala.wordpress.com/1082/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/jaggybala.wordpress.com/1082/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/jaggybala.wordpress.com/1082/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/jaggybala.wordpress.com/1082/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/jaggybala.wordpress.com/1082/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=jaggybala.wordpress.com&amp;blog=6602267&amp;post=1082&amp;subd=jaggybala&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://jaggybala.wordpress.com/2010/02/28/feb-28/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f6b0bf2d79043430f05cf8b6d1866dc8?s=96&#38;d=http%3A%2F%2F1.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96" medium="image">
			<media:title type="html">jaggybala</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>நான் சொல்வதெல்லாம் உண்மை</title>
		<link>http://jaggybala.wordpress.com/2010/02/02/inconvenient-truth/</link>
		<comments>http://jaggybala.wordpress.com/2010/02/02/inconvenient-truth/#comments</comments>
		<pubDate>Tue, 02 Feb 2010 08:09:08 +0000</pubDate>
		<dc:creator>jaggybala</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[கலாச்சாரம்]]></category>
		<category><![CDATA[குற்றம்]]></category>
		<category><![CDATA[வலி]]></category>

		<guid isPermaLink="false">http://jaggybala.wordpress.com/?p=1049</guid>
		<description><![CDATA[&#8220;உன் வயசென்ன தம்பி?&#8221; பதினொன்னு. &#8220;எந்த க்ளாஸ் படிக்கிற?&#8221; ஆறாவது. &#8220;உனக்கு எதாச்சும் பிரச்சனையா?&#8221; அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க. &#8220;இத பாருப்பா, உனக்கு என்ன பிரச்சனைன்னாலும் எங்ககிட்ட சொல்லலாம். அத சரி செய்யத்தான் நாங்க இருக்கோம். அப்படி நீ சொல்லலைன்னா அது உன் வாழ்க்கையையே சீரழிச்சுடும், புரியுதா?&#8221; பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்லீங்க. &#8220;அப்புறம் ஏன் அப்படிப் பண்ணினே?&#8221; தெரியாம பண்ணிட்டேங்க. இனிமேல் பண்ண மாட்டேன். &#8220;ம்ம்&#8230; போலீஸ்னா ரொம்ப பயமா?&#8221; இல்லீங்க. &#8220;ஜெயில்னா என்னான்னு தெரியுமா?&#8221; [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=jaggybala.wordpress.com&amp;blog=6602267&amp;post=1049&amp;subd=jaggybala&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>&#8220;உன் வயசென்ன தம்பி?&#8221;</p>
<p>பதினொன்னு.</p>
<p>&#8220;எந்த க்ளாஸ் படிக்கிற?&#8221;</p>
<p>ஆறாவது.</p>
<p>&#8220;உனக்கு எதாச்சும் பிரச்சனையா?&#8221;</p>
<p>அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க.</p>
<p>&#8220;இத பாருப்பா, உனக்கு என்ன பிரச்சனைன்னாலும் எங்ககிட்ட சொல்லலாம். அத சரி செய்யத்தான் நாங்க இருக்கோம். அப்படி நீ சொல்லலைன்னா அது உன் வாழ்க்கையையே சீரழிச்சுடும், புரியுதா?&#8221;</p>
<p>பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்லீங்க.</p>
<p>&#8220;அப்புறம் ஏன் அப்படிப் பண்ணினே?&#8221;</p>
<p>தெரியாம பண்ணிட்டேங்க. இனிமேல் பண்ண மாட்டேன்.</p>
<p>&#8220;ம்ம்&#8230; போலீஸ்னா ரொம்ப பயமா?&#8221;</p>
<p>இல்லீங்க.</p>
<p>&#8220;ஜெயில்னா என்னான்னு தெரியுமா?&#8221;</p>
<p>&#8230;</p>
<p>&#8220;சொல்லு தம்பி, ஜெயில்னா என்னான்னு தெரியுமா?&#8221;</p>
<p>தெரியுங்க.</p>
<p>&#8220;என்ன?&#8221;</p>
<p>தப்பு பண்ணினவங்களுக்கு எல்லாம் அங்கதான் தண்டனை கொடுப்பாங்க.</p>
<p>&#8220;யாரு தண்டனை கொடுப்பா?&#8221;</p>
<p>போலீஸ்.</p>
<p>&#8220;என்ன மாதிரி தண்டனை கொடுப்பாங்க?&#8221;</p>
<p>தெரியலை.</p>
<p>&#8220;நல்லா யோசிச்சுப் பாரு, கேள்விப்பட்டிருப்ப இல்லியா&#8221;</p>
<p>ரூமுக்குள்ள அடைச்சு வச்சு குச்சியால அடிப்பாங்க.</p>
<p>&#8220;அப்புறம்?&#8221;</p>
<p>நகத்தை எல்லாம் புடுங்கி டெய்லியும் வெயில்ல நிக்க வைப்பாங்க.</p>
<p>&#8220;வேற?&#8221;</p>
<p>பயங்கரமா அடிப்பாங்க.</p>
<p>&#8220;நீ ஜெயிலுக்குப் போகணுமா?&#8221;</p>
<p>ம்ஹூம்.</p>
<p>&#8220;நீ பண்ணினது மத்த விஷயம் மாதிரி சின்னது இல்லை. நீ ஏன் அப்படி செஞ்சேன்னு சொல்லித்தான் ஆகணும். சொல்லாட்டி ஜெயிலுக்குத்தான் போகணும்&#8221;</p>
<p>தினேஷ் அண்ணன்தானுங்க அதெல்லாம் முடியாதுன்னு பெட் கட்டினார், அதான் செஞ்சேனுங்க.</p>
<p>&#8220;தினேஷ் யாரு, உன்னோட ஸ்கூல்ல படிக்கிறவனா?&#8221;</p>
<p>பக்கத்து வீட்டுல இருக்கிற அண்ணன்.</p>
<p>&#8220;அவர் என்ன பண்றார்?&#8221;</p>
<p>தெரியல. அடிக்கடி அவர் வீட்டுக்குப் போவேன். அவரும் அவரோட ஃப்ரெண்ட் மட்டும்தான் இருப்பார்.</p>
<p>&#8220;நீ எதுக்கு அவர் வீட்டுக்குப் போவே?&#8221;</p>
<p>நிறைய புக்ஸ் வச்சிருப்பார். படிக்கிறதுக்காகப் போவேன்.</p>
<p>&#8220;என்ன மாதிரி புக்ஸ் எல்லாம் படிப்ப?&#8221;</p>
<p>காமிக்ஸ் புக்ஸ், சிறுவர் மலர் புக்ஸ்.</p>
<p>&#8220;அது மட்டும்தானா?&#8221;</p>
<p>ம்ம்.</p>
<p>&#8220;நான் முதல்லயே சொல்லியிருக்கேன். நாம் பேச அரம்பிக்கும்போது சத்தியம் பண்ணினே இல்லையா?&#8221;</p>
<p>ம்ம்.</p>
<p>&#8220;அது என்ன புக்னு தெரியுமா?&#8221;</p>
<p>பகவத் கீதை.</p>
<p>&#8220;என்னன்னு சத்தியம் செஞ்சே?&#8221;</p>
<p>நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை-னு சொன்னேன்.</p>
<p>&#8220;ம்ம்.. உண்மைய சொன்னா உனக்கு உதவி பண்ணுவோம். இல்லைன்னா ஜெயிலுக்குத்தான் போகணும். இப்ப சொல்லு, அந்த வீட்ல என்ன இருந்தது, உனக்கு என்ன நடந்தது?&#8221;</p>
<p>நான் எதுவுமே பண்ணலைங்க. தினேஷ் அண்ணன்தான் அசிங்கமான புக்ஸை எல்லாம் குடுத்து படிக்கச் சொன்னார். நான் மாட்டேன்னுதான் சொன்னேன், அவர்தான் ஆம்பளைன்னா இதெல்லாம் படிக்கணும்னு சொன்னார். அதனாலதாங்க படிச்சேன்.</p>
<p>&#8220;கடைசியா போனப்ப என்ன நடந்தது?&#8221;</p>
<p>புதுசா ஒரு புக் வந்திருக்கு படிடான்னு கொடுத்தார். நான் பாத்துகிட்டு இருக்கும்போதே பக்கத்துல வந்து உக்காந்துட்டு தப்பு தப்பா நடந்துகிட்டார். நான் எந்திருச்சு போக எவ்வளவோ முயற்சி செஞ்சேன். அவர்தான் இதெல்லாம் இல்லைன்னா உன்னைய எவனுமே ஆம்பளையா மதிக்க மாட்டான். சின்ன பையனாவேதான் இருப்பேன்னு சொன்னார்.</p>
<p>&#8220;நீ கடைசியா படிச்ச புக் இதானே?&#8221;</p>
<p>நானா படிக்கலீங்க. அவர் சொல்லித்தான் படிச்சேன்.</p>
<p>&#8220;இந்த புக் படிச்சுட்டு அதுல வர்ற மாதிரி ஸ்கூல் பொண்ணுகிட்ட நடந்துகிட்ட, இல்லியா? அந்த பொண்ணு எந்த க்ளாஸ் படிக்குது?&#8221;</p>
<p>நாலாவது.</p>
<p>&#8220;நீ அப்படி பண்ணும்போது அந்தப் பொண்ணு சத்தம் போடலியா?&#8221;</p>
<p>வாயை அமுக்கி புடிச்சுக்கிட்டேன். அந்த புக்ல அந்த மாதிரிதான் போட்டிருந்தது.</p>
<p>&#8220;சரி நீ போகலாம்&#8221;</p>
<p><strong>***</strong></p>
<p>பதினொரு வயது சிறுவன் ஒன்பது வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான். இதில் சிறுமியின் உடலெங்கும் இரத்தக்காயங்கள் ஏற்பட்டதுடன் பெண்ணுறுப்பில் அறுவை சிகிச்சை பிழைக்க வைத்திருக்கிறார்கள்.</p>
<p>இது ஒரு விபத்தல்ல. நோய். அறியாமையால் உருவான நோய். செக்ஸ் கல்வி பனிரெண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை போலவும் பதின்பருவத்தினருக்கு முறையான உறவு, ஒழுக்கம், பழக்கவழக்கம் பற்றியும் கற்பிக்கப்படுகின்றன. அது முட்டுச்சந்தில் வைத்து விற்கப்படுகிற செக்ஸ் புக் இல்லையென்பதை நாம் எப்போது உணர்வோம்?</p>
<p>மதம் பிடித்துப்போன அரசியலவாதிகளுக்கு பயந்துகொண்டும் பழமைவாதிகளின் பிடிகளுக்குள் மாட்டிக்கொண்டும் செக்ஸ் கல்வி மறுக்கப்படுவது எவ்விதத்திலும் நியாயமாகாது.</p>
<p><strong>***</strong></p>
<br />Filed under: <a href='http://jaggybala.wordpress.com/category/%e0%ae%85%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/'>அனுபவம்</a>, <a href='http://jaggybala.wordpress.com/category/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/'>அரசியல்</a>, <a href='http://jaggybala.wordpress.com/category/%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/'>கலாச்சாரம்</a>  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/jaggybala.wordpress.com/1049/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/jaggybala.wordpress.com/1049/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/jaggybala.wordpress.com/1049/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/jaggybala.wordpress.com/1049/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/jaggybala.wordpress.com/1049/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/jaggybala.wordpress.com/1049/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/jaggybala.wordpress.com/1049/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/jaggybala.wordpress.com/1049/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/jaggybala.wordpress.com/1049/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/jaggybala.wordpress.com/1049/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/jaggybala.wordpress.com/1049/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/jaggybala.wordpress.com/1049/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/jaggybala.wordpress.com/1049/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/jaggybala.wordpress.com/1049/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=jaggybala.wordpress.com&amp;blog=6602267&amp;post=1049&amp;subd=jaggybala&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://jaggybala.wordpress.com/2010/02/02/inconvenient-truth/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f6b0bf2d79043430f05cf8b6d1866dc8?s=96&#38;d=http%3A%2F%2F1.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96" medium="image">
			<media:title type="html">jaggybala</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஆயிரத்தில் ஒருவன்</title>
		<link>http://jaggybala.wordpress.com/2010/01/19/ayirathil-oruvan/</link>
		<comments>http://jaggybala.wordpress.com/2010/01/19/ayirathil-oruvan/#comments</comments>
		<pubDate>Tue, 19 Jan 2010 08:18:54 +0000</pubDate>
		<dc:creator>jaggybala</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[கலாச்சாரம்]]></category>
		<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[தமிழன்]]></category>

		<guid isPermaLink="false">http://jaggybala.wordpress.com/?p=1054</guid>
		<description><![CDATA[நூற்றாண்டுகள் ஆட்சிபுரிந்த சோழவம்சம் தமிழகம் மட்டுமின்றி தென்னிந்திய பிராந்தியம் முழுக்க ஆக்கிரமித்திருந்தது. கலை அறிவியல் என்று பல துறைகளில் முன்னோடியாய் இருந்தனர். பின்னாளில் பாண்டியர்கள் சோழ சாம்ராஜ்யத்தை அழித்து வரும்போது சோழர்கள் தன் சந்ததியில் ஒரு பகுதியை தற்போதிருக்கும் வியட்நாம் நாட்டின் அருகிலுள்ள ஒரு தீவில் குடியமர்த்துகின்றனர். பாண்டியர்களிடமிருந்து கைப்பற்றிய குலதெய்வச் சிலையை அவர்களிடம் கொடுத்தனுப்புகின்றனர். அந்தச்சிலை பாண்டியர்கள் காலம் காலமாய்ப் பாதுகாத்து வந்த பொக்கிஷம். அதை மீட்க பாண்டியர்கள் எப்படியும் செல்வார்கள் என்பதை சோழர்கள் அறிந்திருந்தார்கள். [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=jaggybala.wordpress.com&amp;blog=6602267&amp;post=1054&amp;subd=jaggybala&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>நூற்றாண்டுகள் ஆட்சிபுரிந்த சோழவம்சம் தமிழகம் மட்டுமின்றி தென்னிந்திய பிராந்தியம் முழுக்க ஆக்கிரமித்திருந்தது. கலை அறிவியல் என்று பல துறைகளில் முன்னோடியாய் இருந்தனர். பின்னாளில் பாண்டியர்கள் சோழ சாம்ராஜ்யத்தை அழித்து வரும்போது சோழர்கள் தன் சந்ததியில் ஒரு பகுதியை தற்போதிருக்கும் வியட்நாம் நாட்டின் அருகிலுள்ள ஒரு தீவில் குடியமர்த்துகின்றனர். பாண்டியர்களிடமிருந்து கைப்பற்றிய குலதெய்வச் சிலையை அவர்களிடம் கொடுத்தனுப்புகின்றனர்.</p>
<p>அந்தச்சிலை பாண்டியர்கள் காலம் காலமாய்ப் பாதுகாத்து வந்த பொக்கிஷம். அதை மீட்க பாண்டியர்கள் எப்படியும் செல்வார்கள் என்பதை சோழர்கள் அறிந்திருந்தார்கள். பாண்டியர்கள் அக்குலதெய்வச்சிலையைத் தேடி வந்தாலோ சோழர்களை அழிக்க வந்தாலோ அது நடக்காத வண்ணம் முன்னெச்சரிக்கை ஆயத்தங்கள் செய்யப்படுகின்றன. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எளிதில் நெருங்க முடியாதபடியான பாதுகாபபு அரண்களாக இயற்கை சீற்றங்களையும் வீரம் சொறிந்த வம்சாவளி ஆட்களையும் நிறுத்திச் செல்கிறார்கள்.</p>
<p>மேலும், சோழ சாம்ராஜ்யம் மீண்டும் தஞ்சையில் வந்து ஆட்சிபுரியும் என்கிற எண்ணத்தை விட்டுச் செல்கிறார்கள். பின்நூற்றாண்டில் சோழ வம்சத்தில் பிறக்கும் ஒரு தூதுவன் முதுகில் புலி ஓவியத்தை வரைந்தபடி இச்சோழர்களை கண்டுபிடிப்பான். அப்போது அவனுக்கு சொல்லொனாத் துயரங்கள் பிறக்கும். மாரிமழை கொல்லெனப் பெய்யும். அவன் சொற்படி சோழர்க்ள மீண்டும் தமிழகம் வந்து ஆட்சி புரிவார்கள் என்பது போன்ற உளவியல் ஓவியங்கள் வரையப்படுகின்றன. அப்படி அந்த தூதுவன் வரும்வரையில் அவர்கள் வறுமையில் வாடினாலும் எவ்வித துயரத்தை அடைந்தாலும் எத்தனை ஆயிரம் ஆண்டுகளானாலும் அவ்விடத்தைவிட்டு நகரக் கடவாதவர்காளாகிறார்கள். அதுவரை தாமறிந்த சோழ பண்பாட்டையும் கலையையும் வீரத்தையும் மட்டுமே அவர்களும் அவர்களின் சந்ததியினரும் வாழ்ந்து காத்திருக்க வேண்டும்.</p>
<p>அப்படி அந்தச்சோழர்கள் வாழ்ந்த இடத்தைக் காணவும் சிலைகளைக் கண்டுபிடிக்கவும் செல்கின்ற ஒரு அகழ்வாராய்ச்சியாளர் காணாமல் போகிறார். அவரைத் தேடியும் அந்தப்பூர்வீகச் சோழர்கள் எப்படி இறந்து போயிருப்பார்கள் என்று ஆராய்ச்சி செய்யவும் அவ்வகழ்வாராய்ச்சியாளரின் புதல்வியின் துணையுடனும் இராணுவம் மற்றும் கூலியாட்களுடன் ஒரு கும்பல் கிளம்பிச்செல்கிறது.</p>
<p>ஓலைச்சுவடி கொண்டும் தீவிர ஆராய்ச்சி கொண்டும் சோழர்கள் வாழ்ந்த இடம்செல்வதற்கு ஏழு விதமான இடையூறுகள் இருப்பதை அறிகிறார்கள். ஒவ்வொன்றாய் எதிர்கொண்டு செல்கையில் பாண்டியர்களின் சடலங்களையும் எண்ணற்ற அதிசயங்களையும் காண்கிறார்கள். எல்லாவற்றையும் தாண்டி மூன்று பேர் மட்டும் சோழர்கள் வாழ்ந்த இடத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். அம்மூவர் ரீமாசென், ஆன்ட்ரியா மற்றும் கார்த்தி. அங்கே அவர்களுக்கு மென்மேலும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்தச் சோழர்கள் வம்சம் வீழ்ந்துவிடவில்லை. பரம்பரை பரம்பரையாய் அவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வறுமை துன்பத்தில் உழன்றும் தூதுவனை எதிர்நோக்கியும் காத்திருக்கிறார்கள்.</p>
<p>தூதுவன் யார், பாண்டியரின் குலதெய்வச்சிலை என்ன ஆனது, மிச்சமிருந்த சோழ வம்சம் என்ன ஆனது என்பது போல பயணிக்கிறது கதை. திரைக்கதையைக் காணக்காண சத்தியமாய் உடலெங்கும் புல்லரித்தது. Lord of the Rings, Harry Potter வகையில் ஒரு தமிழ்த் திரைப்படம். ஒவ்வொரு காட்சியிலும் கற்பனையும் ஆராய்ச்சியும் உழைப்பும் கொப்பளிக்கிறது. மிகநுட்பமான விஷயங்களைக்கூட நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார்கள்.</p>
<p>சோழர்களை தேடிப்போன பாண்டியர்களைத் தேடி இராணுவம் செல்கிறது. சோழவம்சத்தினருக்கும் இராணுவத்திற்கும் யுத்தம். கத்திக்கும் துப்பாக்கிக்கும் சண்டை. துப்பாக்கியை வென்று முன்னேறுகையில் கையெறி குண்டுகளில் தோற்று விடுகிறார்கள். சோழ மன்னன் இறுதியில் நகைத்துக் கூறுகிறான், &#8220;இது என்ன மாதிரி போர்க்களம் நண்பரே, இப்படியெல்லாம் இருக்கும் என்று ஏன் எங்களுக்குச் சொல்லவில்லை. நாங்கள் பயப்படுவோம் என்றெண்ணினீரோ?&#8221;</p>
<p>பிற்பாதியின் மொத்த வசனம் ஒரு பக்கத்தைத் தாண்டாது. எனினும், அத்தனை வசனத்தையும் ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும் வெளிப்படுத்துகிறது. இடைவேளையின்போது நண்பனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன், &#8220;ஆயிரத்தில் ஒருவன் &#8211; ஆயிரத்தில் ஒரு சினிமா&#8221; என்று. முதல்பாதியில் ஓங்கி நின்ற எழுச்சி பின்பாதியில் இல்லை.</p>
<p>ஒலிநாடா வெளியீட்டு விழாவின் போது இன்னும் 22 டிபார்ட்மெண்ட்ஸ் தேவை என்று செல்வராகவன் முறையிட்டார். உற்பத்தியின் குறைபாட்டை உழைப்பாளியே கண்டுகொள்கிறான். துள்ளுவதோ இளமையில் துவங்கிய செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படம் எடுக்குமளவு Transform ஆகியிருப்பதை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.</p>
<br />Posted in அனுபவம், கலாச்சாரம், சினிமா  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/jaggybala.wordpress.com/1054/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/jaggybala.wordpress.com/1054/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/jaggybala.wordpress.com/1054/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/jaggybala.wordpress.com/1054/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/jaggybala.wordpress.com/1054/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/jaggybala.wordpress.com/1054/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/jaggybala.wordpress.com/1054/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/jaggybala.wordpress.com/1054/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/jaggybala.wordpress.com/1054/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/jaggybala.wordpress.com/1054/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/jaggybala.wordpress.com/1054/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/jaggybala.wordpress.com/1054/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/jaggybala.wordpress.com/1054/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/jaggybala.wordpress.com/1054/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=jaggybala.wordpress.com&amp;blog=6602267&amp;post=1054&amp;subd=jaggybala&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://jaggybala.wordpress.com/2010/01/19/ayirathil-oruvan/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f6b0bf2d79043430f05cf8b6d1866dc8?s=96&#38;d=http%3A%2F%2F1.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96" medium="image">
			<media:title type="html">jaggybala</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ரேனிகுண்டா</title>
		<link>http://jaggybala.wordpress.com/2010/01/04/pain/</link>
		<comments>http://jaggybala.wordpress.com/2010/01/04/pain/#comments</comments>
		<pubDate>Mon, 04 Jan 2010 10:49:10 +0000</pubDate>
		<dc:creator>jaggybala</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[சுயபுராணம்]]></category>
		<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[வலி]]></category>

		<guid isPermaLink="false">http://jaggybala.wordpress.com/?p=979</guid>
		<description><![CDATA[கிறிஸ்துமஸ் தினத்தன்று காலை தஞ்சாவூரில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன். நியூ என்றொரு லோக்கல் சேனல். எம்.ஜி.ஆர் கார் ஓட்டிக் கொண்டு போகிறார். எந்தப் படம் என்று தெரியவில்லை. லதாவை கட்டியணைக்க எம்.ஜி.ஆர் பாய்வதைப் போல வளைவு சுளிவுகளுக்கெல்லாம் மதிப்பு கொடுக்காமல் கார் மின்னல் வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. இப்போது சிவாஜி கார் ஓட்டுவதைக் காண்பிக்கிறார்கள். எம்.ஜி.ஆராவது காரை ஓட்டினார். சிவாஜி ஸ்டீயரிங்கை மட்டும் திருப்பிக் கொண்டிருந்தார், உடம்புக்கு சோப்பு போடுவது போல. கார் நகரவில்லை. பின்னாடி மரங்களும் சில [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=jaggybala.wordpress.com&amp;blog=6602267&amp;post=979&amp;subd=jaggybala&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>கிறிஸ்துமஸ் தினத்தன்று காலை தஞ்சாவூரில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன். நியூ என்றொரு லோக்கல் சேனல்.</p>
<p>எம்.ஜி.ஆர் கார் ஓட்டிக் கொண்டு போகிறார். எந்தப் படம் என்று தெரியவில்லை. லதாவை கட்டியணைக்க எம்.ஜி.ஆர் பாய்வதைப் போல வளைவு சுளிவுகளுக்கெல்லாம் மதிப்பு கொடுக்காமல் கார் மின்னல் வேகத்தில் போய்க்கொண்டிருந்தது.</p>
<p>இப்போது சிவாஜி கார் ஓட்டுவதைக் காண்பிக்கிறார்கள். எம்.ஜி.ஆராவது காரை ஓட்டினார். சிவாஜி ஸ்டீயரிங்கை மட்டும் திருப்பிக் கொண்டிருந்தார், உடம்புக்கு சோப்பு போடுவது போல. கார் நகரவில்லை. பின்னாடி மரங்களும் சில வீடுகளும் நகர்ந்து கொண்டிருந்தன. பத்து விநாடிக்குப் பின் மீண்டும் அதே மரங்கள் வீடுகள். சிவாஜி இன்னும் சோப்புப் போடுவதை நிறுத்தவில்லை. அடப்பாவிகளா,  வெட்டி ஒட்டுவதையாவ்து ஒழுங்காக செய்திருக்கலாமே என்று தோன்றியது. தவிர, சிவாஜிக்கு உண்மையிலேயே கார் ஓட்டத் தெரியுமா என்கிற சந்தேகம் பல இயக்குனர்களுக்கு இருந்ததாக எம்.ஜி.ஆர் ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள்.</p>
<p>அதுவும் முடிந்துவிட்டது. இப்போது ரஜினி கார் ஓட்டுகிறார். பில்லா படம். காரை நீளத்தில் அளந்தால் எப்படியும் இருபது அடிக்குக் குறையாமல் இருக்கும். ரஜினிக்கு கோபம் வந்தால் வாயைத் திறந்தபடியே ஆக்ட் செய்கிறார். வாய்க்குள் ஏதாவது விழுந்தால் கூட அதே லஜ்ஜையில் இருப்பாரா என்று தெரியவில்லை. நடிகர்கள் கார் ஓட்டுவதைக் காண்பிக்கும் நிகழ்ச்சியாய் இருக்கும் என்றெண்ணினேன்.</p>
<p>அடுத்து கமல்ஹாசன் ஓட்டுகிறார். பக்கத்தில் ஸ்ரீப்ரியா. ஆசிய துணைக் கண்டத்திலேயே காரையும் கதாநாயகியையும் ஒரே நேரத்தில் திறம்பட ஓட்டும் வல்லமை கொண்டவர் கமல் மட்டுமே. என்ன இருந்தாலும் கன்னிப் பெண்ணாய் நினைத்து காரை ஓட்ட வேண்டும் என்னும் கருத்தை வழிமொழிந்தவராயிற்றே.</p>
<p>இப்போது விஜய். பொறுமை இழந்து கொண்டிருந்தேன். பின் அஜித், விக்ரம், சிம்பு மற்றும் தனுஷ். மொத்தமாய் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் நீடித்தது. அடுத்து வந்தது தான் ஹைலைட்.</p>
<p><strong>இப்படியெல்லாம் நீங்களும் கார் ஓட்ட வேண்டுமா? வாருங்கள், கவிதா டிரைவிங் ஸ்கூல்.</strong></p>
<p><strong>பதினைந்து ஆண்டு கால பாரம்பரியம் மிக்க ஒரே டிரைவிங் ஸ்கூல், கவிதா டிரைவிங் ஸ்கூல்.</strong></p>
<p><strong>பெண்களுக்கு பெண்க்ளை வைத்தே கற்றுக் கொடுக்கப்படும்.</strong></p>
<p><strong>இன்றே வாருங்கள், கவிதா டிரைவிங் ஸ்கூல், புதிய பஸ் நிலையம் அருகில், தஞ்சாவூர்.</strong></p>
<p>சற்று நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் வாயைப் பிளந்து கொண்டு டி.வி.யையே பார்த்துக் கொண்டிருந்தேன்.</p>
<p>பின்னர் சேனலை மாற்ற அதுவும் லோக்கல் சேனல். பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. முனுசாமிக்கும் கோவிந்தம்மாளுக்கும் பிறந்த ரிஷிதா என்னும் மூன்று வயதுக் குழந்தை பொக்கை வாயுடன் போஸ் கொடுத்தது. பிண்ணனியில் <strong>&#8220;புலி உறுமுது, புலி உறுமுது&#8221;</strong> பாடல்.</p>
<p>பாய்ந்து சென்று டி.வி.யை அணைத்து விட்டேன். ம்ஹும், இன்று மதியம் தனியாக இருக்க முடியாது, ஏதாவது திரைப்படத்திற்குப் போய்விடுவது என்று முடிவு செய்தேன்.</p>
<p>கொடுமைக்காரன், சாரி வேட்டைக்காரன் படத்தை ஏற்கனவே பார்த்தாகி விட்டது. ரேனிகுண்டா படம் நன்றாயிருப்பதாய் இணையத்தில் படித்ததால் இரண்டு மணியளவில் தியேட்டருக்குக் கிளம்பினேன். தஞ்சாவூரில் பால்கனி அறுபது ருபாய். டிக்கட்டை பார்த்தேன். முப்பத்தைந்து ருபாய் என்றிருந்தது. வெரி குட்.</p>
<p>டிக்கட் வாங்கிய இடத்திலேயே அதைக் கிழித்தும் கொடுத்தார்கள். &#8220;மேலே போய் லெப்ட்ல திரும்புங்க சார், படம் போட்டு பத்து நிமிஷம் ஆச்சு&#8221; என்றார்.</p>
<p>அரக்கப் பரக்க ஓடி தியேட்டரின் கதவைத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தேன். படம் போட்டு விட்டார்கள். திரையில் நான்கைந்து இளசுகள் அடித்துக் கொண்டிருந்தனர்.</p>
<p>&lt;வெய்ட்&gt; நீங்க தியேட்டருக்கு லேட்டா போனா&#8230; படம் பார்த்துட்டே உட்கார இடம் தேடுபவரா? நான் அப்படித்தான். என்னமோ அந்த பத்து பதினைந்து விநாடிகளைக் கூட உபயோகப்படுத்திக் கொண்டதாக ஒரு சிற்றின்பம்.&lt;/வெய்ட்&gt;</p>
<p>கதவருகே நின்றுகொண்டே உட்காருவதற்கு ஏதுவான இடத்தைத் தேடினேன். ஜிவ்வென்று ஒரு வலி மண்டைக்குள் உறைக்க சடாரென வலது கையை உருவினேன். பதட்டத்தில் விரலை கதவிடுக்குள் நுழைத்திருந்தேன்.</p>
<p>இராஜராஜன் என்ற பெயர் கொண்ட அந்தத் திரையரங்கின் வாசல் கதவு மட்டும் பெரிய கோவிலுக்கு இணையாய் இருந்தது. என் கைகள் அந்தக் கதவிடுக்கினுள் இருப்பதை அறியாமல் வாயைப் பிளந்தபடி திரையைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். மெல்ல நகர்ந்து வந்த அந்தக் கதவு விரலை நசுக்கிவிட்டது. வலியை உணர்ந்ததுமே விரலை உருவியிருக்கிறேன்.</p>
<p>நல்ல வேளையாக எதுவும் ஆகவில்லை. வலி மட்டும் கொஞ்சம் இருக்கிறது. ஏதாவது ஆகியிருந்தால் அறுபது ருபாய் போச்சு&#8230; என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே குபுகுபுவென இரத்தம் கொட்ட ஆரம்பித்தது. சற்று நேரத்தில் விரல் முழுவதையும் நனைத்து விட்டது. <em>போச்சு&#8230; படம் போச்சு!</em></p>
<p>வெளியே வந்து வாஷ்பேசினைத் தேடினேன். உதவியாளர் அழைத்துச் சென்றார். தண்ணீரில் நனைக்க நனைக்க இரத்தம் நிற்கவில்லை. ஒரு டம்ளருக்கும் மேல் இருக்கும். எத்தனை ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்று தெரியவில்லை.</p>
<p>அருகில் மருத்துவமனை எங்கே இருக்கிறதென்று விசாரித்துக் கொண்டு ஆட்டோவில் சென்றேன். வழியில் மனைவியை கைபேசியில் அழைத்து, &#8220;கையில் லைட்டா அடிபட்டிருக்கு. ஹாஸ்பிடல் போய்ட்டு இருக்கேன்&#8221; என்றேன்.</p>
<p>&#8220;என்ன ஆச்சுங்க.. எப்படி ஆச்சுங்க&#8230; ஏன் அந்த படத்துக்கு போனீங்க&#8230;&#8221; என்று நிறுத்தாமல் கேள்வி மேல் கேள்வி. இரத்தம் சொட்டும் விரலை கவனிப்பது முக்கியமா இவளுக்கு பதில் சொல்வது முக்கியமா என்று சற்றே குழம்பிப்போனேன். அன்பின் நச்சு தாங்காமல் ஒரு கட்டத்தில் கத்தி விட்டேன். &#8220;அடியேய்.. நான் மறுபடி கூப்பிடறேன்&#8221; தொடர்பை துண்டித்துவிட்டேன். இரண்டு நிமிட பயணத்தில் நான்கு முறை சிணுங்கியது கைபேசி. அத்தனையும் அன்புத்தொல்லை SMS.</p>
<p>வினோதகன் மருத்துவமனை. துணி சுற்றிய விரலுடன் அங்குமிங்கும் நடந்து ஒரிரு நிமிடங்களுக்குப் பின் சிகிச்சைப் பிரிவில் வந்து நின்றேன்.</p>
<p>&#8220;டாக்டர் சாப்பிட போயிருக்கார். கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணுங்க&#8221; உட்காரச்சொல்லி நர்ஸ் ஆணையிட்டார்.</p>
<p>பத்து நிமிடத்திற்கும் மேல் யாரும் வரவில்லை. செல்ஃபோன் சிணுங்கியது. SMS.</p>
<p>கைப்புண்ணை நானே பாவமாகப் பார்த்தேன். விரலைகச் சுற்றியிருந்த துணி இரத்தம் தோய்ந்து ஈரமாயிருந்தது. நர்சைப் பார்த்தேன். திரும்பி வந்தவர், &#8220;துணியைக் கழட்டுங்க, பார்க்கலாம்&#8221; என்றார். துணியை கழட்டிக் காட்டினேன்.</p>
<p>விரலை பார்த்துக்கொண்டே, &#8220;எப்படி ஆச்சு?&#8221; என்றார்.</p>
<p>&#8220;அது.. சினிமா தியேட்டர் கதவுல விரல் மாட்டிக்கிச்சு&#8221;.<em> ச்சே, படமும் போச்சு, அறுபது ருபாய் பணமும் போச்சு.</em></p>
<p>&#8220;சினிமா தியேட்டர்&#8230;&#8221; அவர் குரலில் கோபம் கிண்டல் தொணித்தது. &#8220;கூட்டத்துல சிக்கி விரலை நசுக்கிட்டீங்க?&#8221;</p>
<p>&#8220;இல்லை இல்லை&#8230; அது நல்ல படம், கூட்டமே இல்லை. நான்தான் லேட்டா போய் கதவிடுக்குல தெரியாம விரலை வச்சுட்டேன்&#8221;</p>
<p>அவர் நம்பியதைப் போல தெரியவில்லை. FIR ஃபைல் பண்ணச் சொல்வாரோ? பேசாமல் பொண்டாட்டியிடமே கைய கொடுத்திருக்கலாமோ?</p>
<p>&#8220;வெய்ட் பண்ணுங்க, டாக்டர் இப்ப வந்திடுவார்&#8221;</p>
<p>மறுபடியும் துணியைச் சுற்றிக் கொண்டேன். செல்ஃபோன் சிணுங்கியது. SMS. வலியை மீறி டென்ஷன் தலைக்கேறியது. மனைவியை அழைத்தேன். &#8220;நான் ஹாஸ்பிடல்லதான் இருக்கேன். டாக்டர் இப்ப வந்திடுவார். நான் அப்புறமா கூப்பிடறேன், ஃபோனை வை&#8221; டொக்கென்று தொடர்பை துண்டித்துவிட்டேன்.</p>
<p>பத்தாவது விநாடி செல்ஃபோன் மீண்டும் சிணுங்கியது. SMS கண்டுபிடித்தவனை மனதிற்குள் கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டினேன். வலி கோபத்தை அதிகரித்திருந்தது. இப்போது டாக்டரை திட்டினேன்.</p>
<p>மேலும் பத்து நிமிட காத்திருக்குப் பின் டாக்டர் வந்தார். கையை உற்றுப் பார்த்தார். &#8220;ஒன்னும் பிரச்சனை இல்லை. ஒரு பைட் போட்டுக்கலாம்&#8221;</p>
<p>&#8220;சரிங்க டாக்டர்&#8221;. <em>பைட் என்றால் என்னவாயிருக்கும்?!</em></p>
<p>&#8220;இந்த இஞ்செக்ஷன் வாங்கிட்டு வாங்க, பின்னாடி மருந்துக்கடை இருக்கு&#8221;</p>
<p>சீட்டை வாங்கிக்கொண்டு மருந்துக்கடைக்குச் சென்றேன். அங்கே ஏழெட்டு பேர் க்யூவில் நின்றிருந்தார்கள். டாஸ்மாக்கும் மருந்துக்கடைக்கும் கூட்டம் குறைவிருப்பதில்லை. என் முறை வந்ததும் சீட்டை நீட்டினேன். வாங்கிப் படித்தவர் என்னிடமே திருப்பி நீட்டினார். குழப்பமாய் அவரைப் பார்த்தேன். அவரோ மற்ற வாடிக்கையாளர்களை கவனிக்கச் சென்றுவிட்டார்.</p>
<p>புரியாமல், &#8220;ஹலோ சார், ஏன் திருப்பி கொடுத்துட்டீங்க&#8221; என்றேன் அப்பாவியாய்.</p>
<p>கையை ஆட்டி இல்லையென்பதைப் போல் சைகை காண்பித்தார். <em>இந்த ***** வாயைத் தொறந்து சொன்னா குறைஞ்சு போய்டுவானா. </em></p>
<p>மருந்துக்கடைக்கும் டாஸ்மாக்கிற்கும் மேலும் ஒரு ஒற்றுமை தோன்றியது. இரண்டிலுமே நீங்கள் கேட்ட சரக்கு எளிதில் கிடைக்காது.</p>
<p>சீட்டைத் தூர எறிந்துவிட்டு வேறு மருத்துவமனை நோக்கி நடந்தேன். செல்ஃபோன் சிணுங்கியது. இம்முறை எடுத்துப் படித்தேன். &#8220;I am coming, pls-nga&#8221;</p>
<p>தூரத்தில் வேறொரு மருத்துவமனை தெரிந்தது. உள்ளே நுழைந்து சில விநாடி காத்திருக்குப் பின் டாக்டரை சந்தித்தேன். அதே கேள்வியை கேட்டார், &#8220;எப்படி ஆச்சு?&#8221;</p>
<p>&#8220;அது&#8230; வீட்டு கதவிடுக்குல விரல் சிக்கி&#8230; இப்படி ஆயிடுச்சு&#8221; என்றேன். நகம் அருகே விரல் வெட்டுப்பட்டு இரத்தம் இன்னும் வந்து கொண்டிருந்தது.</p>
<p>கூர்ந்து கவனித்த டாக்டர், &#8220;ஒன்னும் பிரச்சனை இல்லை. ஒரு பைட் போட்டுக்கலாம்&#8221; என்றார்.<em> MVC architecture is one of the best design paradigm for Web development என்று சொன்னால் இந்த டாக்டருக்குப் புரியுமா?<br />
</em></p>
<p>டாக்டர் என் கையை இழுத்து விரலைப் பிடித்து டெட்டால் ஊற்றி கழுவினார். அவரை கழுவில் ஏற்ற வேண்டும் போலிருந்தது. பிளேடு, கத்திரி, ஊசி என்று நர்ஸ் எடுத்து வர முகத்தைத் திருப்பிக்கொண்டேன். என்னமோ செய்யப் போகிறார்கள். எப்படியும் வலி பின்னியெடுக்கப் போகிறது என்று மனம் ஆழமாய் நம்பியது. சில விநாடி காத்திருக்குப் பின் சுளீர் சுளீர் என்று இரண்டு முறை வலி சுண்டியிழுத்தது. ஃபக் ஃபக் என்று அழுத்தம் திருத்தமாய் வாய்விட்டுக் கத்தினேன். <em>தமிழில் சொல்லியிருந்தால் செருப்பால் அடித்திருப்பார். அந்த டாக்டர் ஒரு பெண்!</em></p>
<p>&#8220;முடிஞ்சுது, முடிஞ்சுது&#8221; கையை திருப்பிக் கொடுத்தார். விரலைப் பார்த்தேன். ஸ்டேப்ளர் பின் போன்று வெட்டுக்காயத்தின் முன்னும் பின்னும் இணைத்து மாட்டியிருந்தார்கள். <em>இதுதான் பைட்டாய் இருக்க வேண்டும். </em></p>
<p>&#8220;இன்னும் ஒரு வாரம் முடிஞ்சு இத பிரிச்சுடுங்க. இங்கே தான் வரணும்னு இல்லை. எங்கே வேணாலும் பிரிச்சுக்கலாம்&#8221;</p>
<p>&#8220;ஓ.கே. டாக்டர்&#8221;</p>
<p>நூறு ருபாய் ஃபீஸ், நானூறு ருபாய் மருந்து வாங்கி வெளியே வந்தேன். மனைவி நின்றிருந்தாள். இப்போது அவளைப் பார்த்து அகம் மகிழ்ந்து போகிறது. இருவரும் தங்கியிருந்த விடுதியறைக்கு வந்து சேர்ந்தோம். மனதிற்குள் மீண்டும் தோன்றியது. <em>ச்சே, படம் போச்சே.</em></p>
<p><strong>&#8212;&#8211;</strong></p>
<p>ஒரு வாரம் முடிந்து விட்டது. மேலோட்டமாய் இருந்த ஸ்டேப்ளர் பின் இப்போது நன்றாக சதைக்குள் சென்று விட்டது. பிரிப்பதை நினைத்தால் லேசாக வயிறைக் கலக்குகிறது.</p>
<p>பாழாய்ப்போன &#8220;ஃபக்&#8221; வார்த்தை வேறு ஒரு பழக்கமாகவே தொற்றிக் கொண்டுவிட்டது. ஒரு நாள் அதற்கும் சேர்த்து இன்னொரு பைட் போடுவார்கள் என்று நினைக்கிறேன்.</p>
<p><strong>BTW, ரேனிகுண்டா படம் நன்றாயிருப்பதாய் நல்ல சினிமா ரசிகர்கள் சொல்லிக் கேள்விப்பட்டேன். சீக்கிரம் பார்க்க வேண்டும்.</strong></p>
<p><strong><strong>*****</strong></strong></p>
<br />Posted in அனுபவம், சுயபுராணம்  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/jaggybala.wordpress.com/979/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/jaggybala.wordpress.com/979/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/jaggybala.wordpress.com/979/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/jaggybala.wordpress.com/979/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/jaggybala.wordpress.com/979/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/jaggybala.wordpress.com/979/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/jaggybala.wordpress.com/979/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/jaggybala.wordpress.com/979/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/jaggybala.wordpress.com/979/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/jaggybala.wordpress.com/979/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/jaggybala.wordpress.com/979/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/jaggybala.wordpress.com/979/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/jaggybala.wordpress.com/979/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/jaggybala.wordpress.com/979/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=jaggybala.wordpress.com&amp;blog=6602267&amp;post=979&amp;subd=jaggybala&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://jaggybala.wordpress.com/2010/01/04/pain/feed/</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f6b0bf2d79043430f05cf8b6d1866dc8?s=96&#38;d=http%3A%2F%2F1.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96" medium="image">
			<media:title type="html">jaggybala</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>டெரர் கனவு</title>
		<link>http://jaggybala.wordpress.com/2010/01/01/thrill-drea/</link>
		<comments>http://jaggybala.wordpress.com/2010/01/01/thrill-drea/#comments</comments>
		<pubDate>Fri, 01 Jan 2010 06:27:24 +0000</pubDate>
		<dc:creator>jaggybala</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[சுவாரஸ்யம்]]></category>
		<category><![CDATA[நகைச்சுவை]]></category>
		<category><![CDATA[கனவு]]></category>

		<guid isPermaLink="false">http://jaggybala.wordpress.com/?p=917</guid>
		<description><![CDATA[அதிகாலை சுமார் 3:30 மணி இருக்கும். ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறேன். கனவு. பயங்கரமான கனவு. நான் இறந்து விடுகிறேன். என் பிணத்தை தூக்கிக்கொண்டு மயானத்திற்குச் செல்கிறார்கள். கனவிலும் அது அதிகாலை நேரம். ஊரே ஆளரவமின்றி இருக்கிறது. வெகுதூரத்திற்குப் பின்னால் நான் மட்டும் அழுதபடி பதற்றமாய் ஓடி வருகிறேன். முகம் வியர்த்து கண்களில் பயமும் நெஞ்சத்தில் நடுக்கமும் குடிகொண்டிருக்கிறது. எங்கள் வீட்டு வீதியின் கடைசிக்கு வருகிறேன். &#8220;யாருப்பா அது இந்நேரத்துல?&#8221; என்றொரு குரல் கேட்கிறது. உற்றுப் பார்க்கிறேன். பெரியப்பா [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=jaggybala.wordpress.com&amp;blog=6602267&amp;post=917&amp;subd=jaggybala&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>அதிகாலை சுமார் 3:30 மணி இருக்கும். ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறேன். கனவு. பயங்கரமான கனவு.</p>
<p><em><strong>நான் இறந்து விடுகிறேன். </strong></em></p>
<p>என் பிணத்தை தூக்கிக்கொண்டு மயானத்திற்குச் செல்கிறார்கள். கனவிலும் அது அதிகாலை நேரம். ஊரே ஆளரவமின்றி இருக்கிறது. வெகுதூரத்திற்குப் பின்னால் நான் மட்டும் அழுதபடி பதற்றமாய் ஓடி வருகிறேன்.</p>
<p>முகம் வியர்த்து கண்களில் பயமும் நெஞ்சத்தில் நடுக்கமும் குடிகொண்டிருக்கிறது. எங்கள் வீட்டு வீதியின் கடைசிக்கு வருகிறேன்.</p>
<p>&#8220;யாருப்பா அது இந்நேரத்துல?&#8221; என்றொரு குரல் கேட்கிறது. உற்றுப் பார்க்கிறேன். பெரியப்பா கிட்டு.</p>
<p>&#8220;பெரியப்பா, நான் தான்&#8221;</p>
<p>&#8220;டேய்&#8230; வா வா வா, இப்பத்தான் உன் பொணத்த தூக்கிட்டு போனோம், பாத்தியா?&#8221;</p>
<p>&#8220;இல்லை பெரியப்பா, அத பாக்கத்தான் போய்ட்டு இருக்கேன்&#8221; பதற்றம் அதிகரித்தது.</p>
<p>&#8220;அடடா.. கொஞ்ச நேரம் முன்னாடி வந்திருக்கக் கூடாதா? பாடிய பொதச்சுட்டமே!&#8221;</p>
<p>&#8220;புதைச்சுட்டீங்களா&#8230; &#8221; சாஷ்டாங்கமாய் அவர் காலில் விழுந்து கும்பிடுகிறேன். மனம் பயத்தில் இருந்து கொஞ்சமாய் விடுபட்டிருக்கிறது.</p>
<p>&#8220;நல்ல வேளை பெரியப்பா, புதைச்சீங்க&#8230; எரிச்சிருந்தா நான் என்ன பண்ணுவேன்&#8230; ரொம்ப தேங்க்ஸ் பெரியப்பா&#8221; சந்தோஷத்தில் அழுகிறேன்.</p>
<p>&#8220;பரவால்ல விடு&#8230; சரி வா பாடிய பாக்கலாம்&#8221;</p>
<p>&#8220;புதைச்சிட்டதா சொன்னீங்க?&#8221;</p>
<p>&#8220;அட&#8230; தோண்டி பாக்கலாம் வாடா&#8221;. என்னை அழைத்துச் செல்கிறார். மனதை திடப்படுத்திக் கொள்கிறேன்.</p>
<p>இடுகாட்டின் முற்புதர்களுக்கு நடுவில் ஒரு இடம் மட்டும் மேடாய் இருக்கிறது. சுற்றிலும் பூக்கள் கொட்டப்பட்டிருந்தன. என் பிணமாய்த்தான் இருக்கவேண்டும். எந்நேரமும் பொங்கி வரும்படியாய் என் கண்கள் குளமாய் நின்றன.</p>
<p>&#8220;பெரியப்பா&#8230; இப்படி அநியாயமா செத்துப்போய்ட்டனே&#8230;&#8221; அவர் மார்பில் முகம் புதைத்து விக்கிவிக்கி அழுகிறேன்.</p>
<p>&#8220;விடுறா.. விடுறா.. மனுஷனாப் பொறந்தா எல்லாரும் ஒரு நாள் செத்துத்தான் ஆகணும். மனச தைரியமா வச்சிட்டு குழிய தோண்டு. ரொம்ப நேரம் விட்டா பாடி கண்டிஷன் கெட்டுப்போய்டும்&#8221;</p>
<p>பிணமேட்டின் அருகிலேயே மண்வெட்டி இருக்க, அதை எடுத்து மண்ணை கொத்திக் கொத்தி வெளியே எறிகிறேன். சிறிது நேரத்திற்குப் பின் பெரியப்பா வாங்கி தோண்டுகிறார். நான் குத்த வைத்து என் பிண உடம்பைக் காண அமர்ந்திருக்கிறேன்.</p>
<p>மூன்று அடி தோண்டியிருக்கும்போது கலவரமாகிறேன். &#8220;பெரியப்பா, பாடி பக்கத்துலதான் இருக்கும். மண்வெட்டில கொத்திராதீங்க&#8221; என மன்றாடுகிறேன்.</p>
<p>&#8220;எல்லாம் எனக்குத் தெரியும்டா&#8230; நாங்கதானே புதைச்சோம். புதைக்கறப்ப வரமாட்டான். லேட்டா வந்திட்டு பொணத்த காமி, பொணத்த காமின்னு நச்ச வேண்டியது&#8221; சலித்துக் கொண்டார். அவருக்கு என் வேதனை புரியவில்லை போலும்.</p>
<p>மேலும் ஓரடி தோண்டியபின் மண்வெட்டியை ஓரமாய் வைத்துவிட்டு கைகளால் குழி பறிக்கிறார். நான் ஆவலாய் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.</p>
<p>வெள்ளைத்துணியால் மூடப்பட்ட சடலம் தெரிகிறது. குழிக்குள் இறங்கி நானும் பெரியப்பாவும் என் பிணத்தை வெளியே எடுக்கிறோம்.</p>
<p>பெரியப்பா, &#8220;துணிய விலக்கப் போறேன்&#8230; மனச தேத்திக்க&#8221; என்கிறார்.</p>
<p>பெருமூச்சுவிட்டபடி சரியென்று தலையாட்டுகிறேன். துணியை விலக்கியதும் அசைவற்ற என் உடலைக் கண்டு உள்ளம் பதறுகிறது. கண்கள் விரித்து என் முகம் பார்க்கிறேன்.</p>
<p>&#8220;வண்டியில மெதுவாப் போ&#8230; மெதுவாப் போன்னு எத்தனை வாட்டி உன்கிட்ட சொன்னேன். கேட்டியா? இப்பப் பாரு, இருபத்தஞ்சு வயசுல லாரில அடிபட்டு செத்துப் போய்ட்ட&#8221;</p>
<p>&#8220;எப்படி பெரியப்பா உயிர் போச்சு?&#8221;</p>
<p>&#8220;வண்டியில இருந்து கீழே விழுந்ததுல பின் மண்டையில நல்ல அடி. தலை ஓட்டை ஆகி மூளை வெளில தொங்குது பாரு. ஆனா பரவால்லை, கண்ணுல அடிபடல&#8221;</p>
<p>கைகளால் முகத்தை மூடிக்கொண்டு அழுகிறேன். பெரியப்பா என்னைக் கட்டிக்கொள்கிறார். &#8220;பரவால்ல விடுறா&#8230; என்ன இருந்தாலும் அவனவன் பொணத்த அவனே பார்க்கிற பாக்கியம் யாருக்கு வரும். நீ குடுத்து வச்சவன்டா&#8221;</p>
<p>அலறிப் போய்க் கண் விழித்துப் பார்க்கிறேன். மணி 4:00. அத்தனையும் மனதில் பிம்பமாய் ஓடிக்கொண்டிருக்கிறது, இப்போதும்.</p>
<p><strong>***</strong></p>
<p>// தம்பி பிரகாஷ் கண்ட கனவு இது</p>
<p><strong>*****</strong></p>
<br />Posted in அனுபவம், சுவாரஸ்யம், நகைச்சுவை  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/jaggybala.wordpress.com/917/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/jaggybala.wordpress.com/917/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/jaggybala.wordpress.com/917/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/jaggybala.wordpress.com/917/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/jaggybala.wordpress.com/917/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/jaggybala.wordpress.com/917/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/jaggybala.wordpress.com/917/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/jaggybala.wordpress.com/917/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/jaggybala.wordpress.com/917/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/jaggybala.wordpress.com/917/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/jaggybala.wordpress.com/917/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/jaggybala.wordpress.com/917/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/jaggybala.wordpress.com/917/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/jaggybala.wordpress.com/917/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=jaggybala.wordpress.com&amp;blog=6602267&amp;post=917&amp;subd=jaggybala&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://jaggybala.wordpress.com/2010/01/01/thrill-drea/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f6b0bf2d79043430f05cf8b6d1866dc8?s=96&#38;d=http%3A%2F%2F1.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96" medium="image">
			<media:title type="html">jaggybala</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>2 States</title>
		<link>http://jaggybala.wordpress.com/2010/01/01/2-states/</link>
		<comments>http://jaggybala.wordpress.com/2010/01/01/2-states/#comments</comments>
		<pubDate>Fri, 01 Jan 2010 05:49:58 +0000</pubDate>
		<dc:creator>jaggybala</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[கலாச்சாரம்]]></category>
		<category><![CDATA[புத்தகங்கள்]]></category>
		<category><![CDATA[கல்லூரி]]></category>
		<category><![CDATA[காதல்]]></category>
		<category><![CDATA[புத்தகம்]]></category>

		<guid isPermaLink="false">http://jaggybala.wordpress.com/?p=930</guid>
		<description><![CDATA[I was introduced to Chetan Bhagat&#8217;s &#8220;The 3 mistakes of my life&#8221; book by my friend Madhan, who is in Switzerland. After reading it, I felt the urgency of reading his other books and enjoyed them as well. I have recently completed his latest &#8220;2 States&#8221; book. The story is about a North Indian guy [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=jaggybala.wordpress.com&amp;blog=6602267&amp;post=930&amp;subd=jaggybala&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>I was introduced to Chetan Bhagat&#8217;s &#8220;The 3 mistakes of my life&#8221; book by my friend Madhan, who is in Switzerland. After reading it, I felt the urgency of reading his other books and enjoyed them as well.</p>
<p>I have recently completed his latest &#8220;2 States&#8221; book. The story is about a North Indian guy (Krish) and his lady love South Indian girl (Ananya), and their struggle to make their parents agree for the marriage.</p>
<p>&#8220;2 States&#8221; புத்தகத்தின் (தமிழாக்கம் செய்யப்பட்ட) விளம்பர  வரிகள்:</p>
<p>உலகெங்கிலும் காதல் திருமணம்  வெற்றி பெற இரண்டு விஷயங்கள் அவசியமாகிறது.</p>
<ol>
<li>பையனுக்கு பெண்ணை பிடித்திருக்க வேண்டும்</li>
<li>பெண்ணிற்கு பையனை பிடித்திருக்க வேண்டும்</li>
</ol>
<p>இந்தியாவில் மட்டும் காதல் திருமணம் வெற்றி பெற எட்டு விஷயங்கள் அவசியமாகிறது.</p>
<ol>
<li>பையனுக்கு பெண்ணை பிடித்திருக்க வேண்டும்</li>
<li>பெண்ணிற்கு பையனை பிடித்திருக்க வேண்டும்</li>
<li>பையனின் குடும்பத்திற்கு பெண்ணை பிடித்திருக்க வேண்டும்</li>
<li>பெண்ணின் குடும்பத்திற்கு பையனை பிடித்திருக்க வேண்டும்</li>
<li>பையனின் குடும்பத்திற்கு பெண்ணின் குடும்பத்தை பிடித்திருக்க வேண்டும்</li>
<li>பெண்ணின் குடும்பத்திற்கு பையனின் குடும்பத்தை பிடித்திருக்க வேண்டும்</li>
<li>இன்னும் பையனுக்கு பெண்ணை பிடித்திருக்க வேண்டும்</li>
<li>இன்னும் பெண்ணிற்கு பையனை பிடித்திருக்க வேண்டும்</li>
</ol>
<p>Being from Tamil Nadu and considering my taste, I enjoyed most of the fun phrases about South India. Making fun involve criticizing someone, one way or another. If we can&#8217;t enjoy the criticism made towards us, how could we possibly have fun in life?</p>
<p>Chetan pulls everyone&#8217;s leg, including his family and friends!  It is true that TN people are more inclined towards movie stars, take things too emotional, still treat girlfriend/love as weird feelings, etc. etc. Let alone, having Sex before marriage is considered to be the greatest mistake that could ever be done!</p>
<p>I feel that many people will keep this book close to heart, as it will rewind (remind?) their sweet personal memories! Atleast for me, I felt the ache while reading it. I was able to remember those sleepless nights, sparkling thoughts, cheerful moments, and ecstatic feelings.</p>
<p>I stopped reading the book in the middle, as I couldn&#8217;t bear the ache, though it was so sweet! Sweet poison is still a poison, right? Anyway, I can&#8217;t run from my past and I don&#8217;t want to do them any longer. Never regret your past, a great monk said once. I started reading back the book and felt very happy for Krish and Ananya.</p>
<p>The best thing is, Chetan applied &#8220;fun&#8221; all over the book that one cannot turn a page without a laugh! In fact, I laughed to cry during the end of the book. And just before the end, when Krish and Ananya break-up and when Krish&#8217;s father tries to unite them&#8230; I tried hard to make the floating tears invisible. I don&#8217;t remember when I read a book with such enthusiasm.</p>
<p>Interestingly, all of his books deal with the essential events of youth: College, Study, Exam, Fearness, Friends, Beer, Smoke, Girlfriend, Sex&#8230; you name it. And most interestingly, none of them makes us feel bored at any time. I liked this state of transition in his books:</p>
<p><em>Infactuation -&gt; Trying to be friend -&gt; Friend -&gt; Blossom of love -&gt; Trying to be friend -&gt; Kiss -&gt; Girlfriend -&gt; Sex<br />
</em></p>
<p>To put short, all his books are a perfect mixture of fun, romance and thriller. Yes, my writings do have some impact from his books. How could one possibly hide out the inspiration and think about creativity?</p>
<p>Finally, to Chetan&#8230; Congratulations, Wish you good luck, Keep writing and (last but not least) take care of our TN girl &#8211; Anusha Bhagat <img src='http://s0.wp.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' /> </p>
<p>- ஜெகதீசன் / Jagadeesan</p>
<p><strong>*****</strong></p>
<div id="_mcePaste" style="overflow:hidden;position:absolute;left:-10000px;top:466px;width:1px;height:1px;">
<p>Interestingly, all of his books deal with the essential events of youth: College, Study, Exam, Fearness, Friends, Beer, Smoke, Girlfriend, Sex&#8230; you name it. And most interestingly, none of them makes us feel bored at any time.</p>
<p>I liked this state of transition in his books:</p>
<p><em>Infactuation -&gt; Trying to be friend -&gt; Friend -&gt; Blossom of love -&gt; Trying to be friend -&gt; Kiss -&gt; Girlfriend -&gt; Sex<br />
</em></p>
<p>I feel that many people will keep this book close to heart, as it will rewind (remind?) their sweet personal memories! Atleast for me, I felt the ache while reading it. I was able to remember those sleepless nights, sparkling thoughts, cheerful moments, and ecstatic feelings.</p>
</div>
<br />Posted in அனுபவம், கலாச்சாரம், புத்தகங்கள்  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/jaggybala.wordpress.com/930/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/jaggybala.wordpress.com/930/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/jaggybala.wordpress.com/930/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/jaggybala.wordpress.com/930/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/jaggybala.wordpress.com/930/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/jaggybala.wordpress.com/930/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/jaggybala.wordpress.com/930/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/jaggybala.wordpress.com/930/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/jaggybala.wordpress.com/930/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/jaggybala.wordpress.com/930/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/jaggybala.wordpress.com/930/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/jaggybala.wordpress.com/930/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/jaggybala.wordpress.com/930/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/jaggybala.wordpress.com/930/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=jaggybala.wordpress.com&amp;blog=6602267&amp;post=930&amp;subd=jaggybala&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://jaggybala.wordpress.com/2010/01/01/2-states/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f6b0bf2d79043430f05cf8b6d1866dc8?s=96&#38;d=http%3A%2F%2F1.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96" medium="image">
			<media:title type="html">jaggybala</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>2009 டு 2010</title>
		<link>http://jaggybala.wordpress.com/2009/12/31/2009-to-2010/</link>
		<comments>http://jaggybala.wordpress.com/2009/12/31/2009-to-2010/#comments</comments>
		<pubDate>Thu, 31 Dec 2009 15:44:02 +0000</pubDate>
		<dc:creator>jaggybala</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[கலாச்சாரம்]]></category>
		<category><![CDATA[சுயபுராணம்]]></category>

		<guid isPermaLink="false">http://jaggybala.wordpress.com/?p=993</guid>
		<description><![CDATA[ஒரு உற்சாகமான உணர்வுப்பூர்வமான ஆண்டாக 2009 அமைந்திருந்தது. என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட ஒன்பது நிகழ்வுகள் இங்கே: 1 ) மார்ச் 8, 2009-ல் எனக்குத் திருமணம் நடந்தது. திருமணத்தின் மீது அதிகப்படியான நம்பிக்கையும் ஆர்வமும் இல்லையென்றாலும் குடும்பமும் துணையும் அத்தியாவசியம் என்று கருதுகிறேன். பெருமைக்காகவோ வித்தியாசப்படுவதாகவோ சொல்லவில்லை, உண்மையில் அன்பை வெளிக்காட்டாத அரைவேக்காட்டுப் பயல்தான் நான். 2 ) ஜெர்மனியில் தனிமையில் அறையெடுத்துத் தங்கியிருந்த ஒரு சமயம். ஒரு பார்ட்டியை முடித்து விட்டு வீடு வருகையில் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=jaggybala.wordpress.com&amp;blog=6602267&amp;post=993&amp;subd=jaggybala&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஒரு உற்சாகமான உணர்வுப்பூர்வமான ஆண்டாக 2009 அமைந்திருந்தது. என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட ஒன்பது நிகழ்வுகள் இங்கே:</p>
<p><strong>1 )</strong> மார்ச் 8, 2009-ல் எனக்குத் திருமணம் நடந்தது. திருமணத்தின் மீது அதிகப்படியான நம்பிக்கையும் ஆர்வமும் இல்லையென்றாலும் குடும்பமும் துணையும் அத்தியாவசியம் என்று கருதுகிறேன். பெருமைக்காகவோ வித்தியாசப்படுவதாகவோ சொல்லவில்லை, உண்மையில் அன்பை வெளிக்காட்டாத அரைவேக்காட்டுப் பயல்தான் நான்.</p>
<p><strong>2 )</strong> ஜெர்மனியில் தனிமையில் அறையெடுத்துத் தங்கியிருந்த ஒரு சமயம்.</p>
<p>ஒரு பார்ட்டியை முடித்து விட்டு வீடு வருகையில் மணி நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அவசர அவசரமாய் வீடு முழுவதும் சில்லறை இருக்கிறதா என்று பார்க்கிறேன். பத்து யூரோ, ஐம்பது யூரோ தாள்கள் இருக்கின்றன. சில்லறை இல்லை. மனம் பதைபதைத்தது. அங்குமிங்கும் அலைகிறேன். ம்ஹூம், எங்கு தேடியும் காயின் இல்லை. கை கால்கள் நடுங்கின. ஃபக், ஃபக் என்று நூறு முறை சொல்லியிருப்பேன்.</p>
<p>அடுக்ககத்தின் கீழே இறங்கி ரோட்டிற்கு வந்தேன். யாராவது தென்படுகிறார்களா என்று ஆர்வத்துடன் சுற்றும் முற்றும் தேடினேன். கால் மணி நேர காத்திருக்குப் பின் ஒருவர் மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தார். அவரை நோக்கி ஓடினேன்.</p>
<p>&#8220;Entschuldingen Sie, Haben Sie einen Zigaretten bitte?&#8221;</p>
<p>அவர் சிகரெட்டை எடுத்து நீட்டினார். அவசர அவசரமாய் உருவி பற்ற வைத்து ஒரு இழுப்பு இழுத்த பின்னரே மனம் அமைதி கொண்டது. மார்க் ட்வைன் ஒருமுறை சொன்னாராம், &#8220;Quit smoking is very easy, I have done it thousands of times&#8221;</p>
<p>ஆறு வருடப் பழக்கம். சாதாரணமாக நான் யாருடனும் எளிதில் பேசிப்பழகாதவன். இந்த சிகரெட் பழக்கம் மட்டும் பல நேரங்களில் பிச்சை எடுக்கவும் தானம் கொடுக்கவும் வைத்திருக்கிறது. இடையில் நிறுத்துவதற்கு முயற்சி செய்து இரண்டு நாட்கள் புகைக்காமல் இருந்திருக்கிறேன். அதைத் தவிர, மற்ற எல்லா நாட்களிலும் ஐந்து முதல் இருபத்தைந்து சிகரெட் வரை புகைத்திருக்கிறேன்.</p>
<p>எனக்கு திருமணமான அதே மார்ச் 8 ஆம் நாள் புகைப் பழக்கத்தை அடியோடு நிறுத்திவிட்டேன். அதற்குண்டான மன தைரியத்தைக் கொடுத்த நண்பர்களான மதன், முருகானந்த், பாலு அண்ணா மற்றும் <a href="http://www.becomeanex.org/" target="_blank">http://www.becomeanex.org/</a> ஒத்த இணையதளங்கள் அனைத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.</p>
<p><strong>3 )</strong> தற்போது நான் வேலை செய்யும் பன்னாட்டு நிறுவனமான Calsoft Labs-ல் வேறெங்கும் இல்லாத அளவு மதிப்பும் மனநிறைவும் கிடைத்திருக்கிறது. பணம் தவிர்த்து பாலிடிக்ஸ் தவிர்த்து Work Satisfaction என்பதன் முழு ஆனந்தத்தை அடைந்திருக்கிறேன். நான்கு பேராய் ஆரம்பித்த எங்கள் குழுவில் இப்போது பதினொரு பேர்.</p>
<p>திறந்த மூல மென்பொருட்களின் (Open Source Softwares) மேலான நோக்கினையும் மைக்ரோசாஃப்டுக்கு எதிராய் போராடும் குணத்தையும் பன்னாட்டு நிறுவனத்திற்குள் நுழைத்து அதன் வெற்றிப் படிகளில் பயணிப்பதிலும் மனநிறைவு.</p>
<p><strong>4 )</strong> <a href="http://jeyamohan.in/" target="_blank">ஜெயமோகன்</a> எழுத்துக்களின் மீதான மோகமும், கமல்ஹாசன் மீதான நன்மதிப்பும் மென்மேலும் அதிகரித்திருக்கிறது. நன்மை தீமைகளைப் பிரித்தும் வகுத்தும் அதைத் தொடர்ந்து வழிநடக்கவும் குரு அவசியம் என்று அலுவலக மேலதிகாரி ஒருமுறை சொன்னார். அவ்வகையில், ஜெயமோகனும் கமல்ஹாசனும் என் குருக்கள் என்பதில் எனக்குப் பெருமையுண்டு.</p>
<p><strong>5 )</strong> என் நெருங்கிய நண்பர்களான பாலு அண்ணா, வெங்கடேஷ், சம்பத், பிரகாஷ் போன்றோருடன் இன்னும் நெருக்கமான உணர்வுப்பூர்வமான நட்பை அடைந்திருக்கிறேன். பாலு அண்ணாவும் இவ்வருடம் திருமணம் முடித்திருக்கிறார். காதல் திருமணம்.</p>
<p><strong>6 )</strong> இவ்வலைப்பூவை பிப்ரவரி மாதம் துவங்கி சில கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிரமுடிந்தது. நான் எழுத்தாளனோ ஆய்வாளனோ அல்ல என்பதை அறிவேன், ஆனால் ஓய்வு நேரத்தை எழுத்திலும் ஆய்விலும் பயன்படுத்த வேண்டும் என்கிற மனஎழுச்சி இருக்கிறது.</p>
<p><strong>7 )</strong> இவ்வருடம் ஈழம் குறித்த உணர்வுகள் எழாத தமிழன் இருக்க முடியாது. தமிழீழம் கனவீழமாகிப் போனது வருத்தத்தின் உச்சம். அதன் வடு நெடுநாள் இருக்கும். தனிப்பட்ட இயலாமையும் அவமானமுமே நிம்மதியிழக்கச் செய்யும்போது ஓர் இனமே வீழ்ந்தழிந்து போய் நாடே சவக்காடானது ஆழமான வலி. சீமான், திருமா, பழ. நெடுமாறன், முத்துக்குமார் என தைரியமாய் உணர்வுகளைப் பதித்த நெஞ்சங்கள் வாழ்க.</p>
<p><strong>8 )</strong> மறுபடியும் என் திருமணத்தைப் பற்றிய தகவல். ஒரு திருமணம் எப்படி நடக்கக்கூடாதென்று நினைத்திருந்தேனோ அவ்வாறே என் திருமணம் நடந்தது.</p>
<p>- பெண் வீட்டாராய் விருப்பப்பட்டுக் கொடுத்தாலும் வரதட்சணைதான் என்கிற பட்சத்தில், நான் கட்டாய வரதட்சணை பெறப்பட்டேன்.</p>
<p>- இரண்டாயிரத்திற்கும் குறையாமல் கூட்டம், ஆர்ப்பாட்டம் என சமுதாய/சாதிப் பிரச்சனைகளை முன்நிறுத்தும் பெரும்பாலான கூத்துகள் அரங்கேறின.</p>
<p>- நான் வாங்கிய காருக்கு ரோஜாப்பூ மாலையிட்டு மண்டபத்தின் முன்நிறுத்தி அலங்கரித்திருந்தார்கள்.</p>
<p>- நெற்றி நிறைய விபூதி சந்தனம் குங்குமம் இட்டு கோவிலையும் நெருப்பையும் வலம்வந்து மந்திரங்கள் ஓதி கன்னத்தில் போட்டுக்கொண்டு தாலி கட்டினேன்.</p>
<p>என் திருமணத்தில் எனக்குப் பிடித்த விஷயங்கள் மூன்று மட்டுமே: மனைவி லீலாவதி, அவள் குடும்பம் (அப்பா பாலசுப்ரமணியம், அம்மா பத்மா, அண்ணன் மகேஷ்) மற்றும் நான் அணிந்திருந்த பட்டுவேட்டி பட்டுசட்டை!</p>
<p><strong>9 )</strong> மன்னிக்கவும், பர்சனல் <img src='http://s1.wp.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' /> </p>
<p><strong>***</strong></p>
<p>புதுவருட சபதம் எடுக்கலாமா என்று தீவிர யோசனைக்குப் பின் 2009-ல் எடுத்த சபதத்தையாவது இம்முறை நிறைவேற்றுவது என்றிருக்கிறேன். அதற்கு முன், சமீபத்தில் நான் சந்தித்த இரண்டு சுவாரஸ்யமான சம்பவங்கள்:</p>
<p><strong>1 )</strong> நடிகர் சூர்யா கவுண்டர் என்று நான் சார்ந்திருக்கும் மனிதர்கள் பலர் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். ஜோதிகா வேறு மதம் வேறு சாதி, சாதியின் அடையாளமாக சூர்யா இருக்க விரும்ப மாட்டார் என்றால்&#8230; ம்ஹும், சூர்யா கவுண்டன்.</p>
<p><strong>2 )</strong> செட்டியாரில் இருந்து கிருத்துவத்திற்கு மாறியவர்கள் முதலியாரில் இருந்து கிருத்துவத்திற்கு மாறியவர்களையோ அல்லது வேறு மதம்/சாதியில் இருந்து கிருத்துவத்துக்கு மாறியவர்களையோ திருமணம் செய்து கொள்ள மாட்டார்களாம். செட்டியாரில் இருந்து கிருத்துவத்திற்கு மாறிய வீட்டாரிடம் மட்டுமே சம்பந்தம் வைத்துக் கொள்வார்களாம்! உங்கள் கடவுள் நம்பிக்கையும் மதக்கோட்பாடுகளும் என்னைக் குழப்புகிறதய்யா!!</p>
<p>இப்போது புதுவருட சபதம். ரொம்ப சிம்பிள். எக்காரணம் கொண்டும் எந்தச் சூழ்நிலையிலும் எந்த ஜாதியின் பெயரையும் மனதறிந்து சொல்லக்கூடாது என்பதுதான். எழுத்தில் வந்தாலும் வரும், குட்டுவதற்காக அல்லது கேலி செய்வதற்காக மட்டும்.</p>
<p>நன்றி 2009!</p>
<p>வருக 2010 <img src='http://s0.wp.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' /> </p>
<p><strong>அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.<br />
</strong></p>
<br />Posted in அனுபவம், கலாச்சாரம், சுயபுராணம்  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/jaggybala.wordpress.com/993/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/jaggybala.wordpress.com/993/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/jaggybala.wordpress.com/993/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/jaggybala.wordpress.com/993/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/jaggybala.wordpress.com/993/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/jaggybala.wordpress.com/993/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/jaggybala.wordpress.com/993/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/jaggybala.wordpress.com/993/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/jaggybala.wordpress.com/993/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/jaggybala.wordpress.com/993/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/jaggybala.wordpress.com/993/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/jaggybala.wordpress.com/993/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/jaggybala.wordpress.com/993/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/jaggybala.wordpress.com/993/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=jaggybala.wordpress.com&amp;blog=6602267&amp;post=993&amp;subd=jaggybala&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://jaggybala.wordpress.com/2009/12/31/2009-to-2010/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f6b0bf2d79043430f05cf8b6d1866dc8?s=96&#38;d=http%3A%2F%2F1.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96" medium="image">
			<media:title type="html">jaggybala</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>@ டாக்டர்</title>
		<link>http://jaggybala.wordpress.com/2009/10/06/doctor-at/</link>
		<comments>http://jaggybala.wordpress.com/2009/10/06/doctor-at/#comments</comments>
		<pubDate>Tue, 06 Oct 2009 10:09:08 +0000</pubDate>
		<dc:creator>jaggybala</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[சுயபுராணம்]]></category>

		<guid isPermaLink="false">http://jaggybala.wordpress.com/?p=855</guid>
		<description><![CDATA[&#8220;ஏங்க, ஆல் இண்டியா மெடிக்கல் PG என்ட்ரன்ஸ் எக்ஸாம் அப்ளிகேஷன்ல ஈமெயில் அட்ரஸ் கேக்கறாங்க&#8221; &#8220;சரி &#8230;&#8221; &#8220;உங்க ஈமெயில் சொல்லுங்க&#8221; &#8220;ஒரு டாக்டர் கேக்கற கேள்வியாடி இது?&#8221; &#8220;கிண்டல் பண்ணாம சொல்லுங்க&#8221; &#8220;க்ரியேட் பண்ணி தரட்டுமா?&#8221; &#8220;இல்ல வேண்டாம். உங்க ID மட்டும் சொல்லுங்க போதும்&#8221; &#8220;ஜெகதீசன் டாட் பாலகிருஷ்ணண் அட் ஜிமெயில் டாட் காம்&#8221; &#8220;ஓ.கே.&#8221; &#8220;ஓ.கே.வா? எங்க ஸ்பெல் பண்ணு பார்க்கலாம்!&#8221; &#8220;jagadeesan.balakrishnan&#8221; &#8220;வெரி குட்&#8221; &#8220;ஏங்க ஒரு டவுட்&#8230;&#8221; &#8220;சொல்லு&#8221; &#8220;அட்-னா [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=jaggybala.wordpress.com&amp;blog=6602267&amp;post=855&amp;subd=jaggybala&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>&#8220;ஏங்க, ஆல் இண்டியா மெடிக்கல் PG என்ட்ரன்ஸ் எக்ஸாம் அப்ளிகேஷன்ல ஈமெயில் அட்ரஸ் கேக்கறாங்க&#8221;</p>
<p>&#8220;சரி &#8230;&#8221;</p>
<p>&#8220;உங்க ஈமெயில் சொல்லுங்க&#8221;</p>
<p>&#8220;ஒரு டாக்டர் கேக்கற கேள்வியாடி இது?&#8221;</p>
<p>&#8220;கிண்டல் பண்ணாம சொல்லுங்க&#8221;</p>
<p>&#8220;க்ரியேட் பண்ணி தரட்டுமா?&#8221;</p>
<p>&#8220;இல்ல வேண்டாம். உங்க ID மட்டும் சொல்லுங்க போதும்&#8221;</p>
<p>&#8220;ஜெகதீசன் டாட் பாலகிருஷ்ணண் அட் ஜிமெயில் டாட் காம்&#8221;</p>
<p>&#8220;ஓ.கே.&#8221;</p>
<p>&#8220;ஓ.கே.வா? எங்க ஸ்பெல் பண்ணு பார்க்கலாம்!&#8221;</p>
<p>&#8220;jagadeesan.balakrishnan&#8221;</p>
<p>&#8220;வெரி குட்&#8221;</p>
<p>&#8220;ஏங்க ஒரு டவுட்&#8230;&#8221;</p>
<p>&#8220;சொல்லு&#8221;</p>
<p>&#8220;அட்-னா <strong>a</strong> மாதிரி போட்டு சுழிச்சு விடுவாங்களே, அதானே?&#8221;</p>
<address><em><strong>***</strong></em></address>
<br />Posted in அனுபவம், சுயபுராணம்  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/jaggybala.wordpress.com/855/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/jaggybala.wordpress.com/855/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/jaggybala.wordpress.com/855/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/jaggybala.wordpress.com/855/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/jaggybala.wordpress.com/855/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/jaggybala.wordpress.com/855/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/jaggybala.wordpress.com/855/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/jaggybala.wordpress.com/855/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/jaggybala.wordpress.com/855/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/jaggybala.wordpress.com/855/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/jaggybala.wordpress.com/855/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/jaggybala.wordpress.com/855/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/jaggybala.wordpress.com/855/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/jaggybala.wordpress.com/855/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=jaggybala.wordpress.com&amp;blog=6602267&amp;post=855&amp;subd=jaggybala&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://jaggybala.wordpress.com/2009/10/06/doctor-at/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f6b0bf2d79043430f05cf8b6d1866dc8?s=96&#38;d=http%3A%2F%2F1.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96" medium="image">
			<media:title type="html">jaggybala</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>உன்னைப்போல் ஒருவன்</title>
		<link>http://jaggybala.wordpress.com/2009/09/22/uop/</link>
		<comments>http://jaggybala.wordpress.com/2009/09/22/uop/#comments</comments>
		<pubDate>Tue, 22 Sep 2009 19:22:07 +0000</pubDate>
		<dc:creator>jaggybala</dc:creator>
				<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[கமல்ஹாசன்]]></category>

		<guid isPermaLink="false">http://jaggybala.wordpress.com/?p=795</guid>
		<description><![CDATA[எந்தக்கதைக்கும் சுவாரஸ்யம் என்பது ஒரு சிறப்பம்சம். அதுவும் சினிமா போன்ற வெகுஜன மீடியாவிற்கு சுவாரஸ்யம், மிக அவசியம். இதுதான் கதை, க்ளைமேக்ஸை திரையில் காணுங்கள் என்று சொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. காலையில் ஆரம்பித்து மாலையில் முடிகிறது கதைக்கரு. இரண்டு மணி நேர படபடப்பு. பரபரப்பு. பரிதவிப்பு. துவக்கம் முதல் இறுதிவரை கமல்ஹாசனுக்கு ஒரே உடை. மோகன்லாலுக்கு இரண்டு. தமிழ் மக்கள் ரசனைக்கேற்ப படம் எடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவது மக்களை ஏய்க்கும் குணம். [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=jaggybala.wordpress.com&amp;blog=6602267&amp;post=795&amp;subd=jaggybala&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>எந்தக்கதைக்கும் சுவாரஸ்யம் என்பது ஒரு சிறப்பம்சம். அதுவும் சினிமா போன்ற வெகுஜன மீடியாவிற்கு சுவாரஸ்யம், மிக அவசியம். இதுதான் கதை, க்ளைமேக்ஸை திரையில் காணுங்கள் என்று சொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. காலையில் ஆரம்பித்து மாலையில் முடிகிறது கதைக்கரு. இரண்டு மணி நேர படபடப்பு. பரபரப்பு. பரிதவிப்பு. துவக்கம் முதல் இறுதிவரை கமல்ஹாசனுக்கு ஒரே உடை. மோகன்லாலுக்கு இரண்டு.</p>
<p>தமிழ் மக்கள் ரசனைக்கேற்ப படம் எடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவது மக்களை ஏய்க்கும் குணம். அறிவீனம். ஹிந்தியில் ஆமிர், அப் தக் சப்பன் என்று பல சினிமாக்கள் உலகத்தரம் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துவிட்டன. அப்படி ஒரு பயணம்தான் உன்னைப்போல் ஒருவன்.</p>
<p>ஹேராம் படத்தில் ஒரு வசனமுண்டு. வயதான சாகேத் ராம் கமலைப் பார்த்து பேரன் சாகேத் ராம், &#8220;எங்க தாத்தா எப்பவுமே ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார்னு எந்தக் கதையையும் ஆரம்பிக்க மாட்டார். நான் இருந்த ஊர்ல ஒரு ராஜா இருந்தார்னுதான் ஆரம்பிப்பார்&#8221; என்பார். அதைப்போல பெரும்பாலான படங்களில் வெகுவாரியான முக்கியத்துவத்தைத் தன் கதாபாத்திரத்திற்கே கொடுப்பவர் கமல்.</p>
<p>ஆனால், இந்தப் படத்தின் நாயகன் என மோகன்லாலையே சொல்லவேண்டும். நடிப்பதற்கான அதிகபட்ச வாய்ப்பும் அவருக்கே. மிடுக்கான தோற்றமும் கம்பீரமான குரலுமாய் லால் இன்னொரு சிவாஜி. கமலுக்கு இயல்பான கதாபாத்திரம். தீபாவளிக்கு டிவி பேட்டி கொடுப்பதுபோல எல்லா காட்சிகளிலும் அனாசயமாய் நடித்துவிட்டுச் செல்கிறார். கருவறுத்தல் பற்றிப் பேசுகையில் நம்மையுமறியாமல் கண்களில் நீர் ஊறுகிறது.</p>
<p>ஆரிஃப் ஆக வரும் போலீஸ் கதாபாத்திரம் கன கச்சிதம். எங்கேயோ பார்த்ததுபோல இருக்கிறதே என்று யோசித்தால், அட&#8230; அபியும் நானும் படத்தில் சர்தார்ஜியாக வரும் ஹீரோ! கமல்ஹாசன் படத்தில் மற்ற நடிகர்களைப் பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவமே.</p>
<p>சேதுராமனாய் வரும் மற்றொரு போலீசிடம் மோகன்லால், &#8220;ஒரு வேளை இந்த ஆப்ரேஷன் தோத்து நீங்க&#8230;&#8221; என்று ஆரம்பிக்கையில், &#8220;செத்துப்போய்ட்டான்னு கேக்க்றீங்களா சார், நோ ப்ராப்ளம் சார். ட்யூட்டி ஃபர்ஸ்ட்&#8221; என்கிறார். இப்படிப்பட்ட ஆட்கள் உண்மையிலும் இருக்கிறார்கள் என்று நினைக்கையில் நெஞ்சம் நெகிழ்கிறது.</p>
<p>ஷ்ருதியின் இசை எப்படி இருக்கிறதென்ற ஆர்வத்துடன்தான் சென்றேன். ஆனால், படத்தின் போக்கில் இசையை ஊர்ந்து கவனிக்கவில்லை. எப்படியும் மோசம் என்று சொல்லமுடியாது. இசை சரியில்லை என்றால் உடனே காட்டிக் கொடுத்துவிடும். கேமரா, தொழில்நுட்பம், வசனம் என அனைத்தும் கதையைச் சுற்றியே பயணிக்கிறது. பிரதானமாய். பிரமாதமாய்.</p>
<p>கமல்ஹாசனின் தீவிர ரசிகனானதால், விமர்சனத்தை இத்துடன் நிறுத்திக் கொள்வது நலமென்று தோன்றுகிறது. பாடல், நடனம், காதல், காமெடி, சண்டை, பஞ்ச் வசனம், ஏன்&#8230; ஹீரோயின் கூட இல்லாத தரமான தமிழ் சினிமா தந்த கமல்ஹாசனுக்கு எம் வந்தனங்கள். உன்னைப்போல் ஒருவனாய் இருக்க நாங்களும் விரும்புகிறோம்.</p>
<br />Posted in சினிமா  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/jaggybala.wordpress.com/795/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/jaggybala.wordpress.com/795/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/jaggybala.wordpress.com/795/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/jaggybala.wordpress.com/795/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/jaggybala.wordpress.com/795/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/jaggybala.wordpress.com/795/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/jaggybala.wordpress.com/795/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/jaggybala.wordpress.com/795/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/jaggybala.wordpress.com/795/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/jaggybala.wordpress.com/795/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/jaggybala.wordpress.com/795/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/jaggybala.wordpress.com/795/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/jaggybala.wordpress.com/795/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/jaggybala.wordpress.com/795/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=jaggybala.wordpress.com&amp;blog=6602267&amp;post=795&amp;subd=jaggybala&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://jaggybala.wordpress.com/2009/09/22/uop/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/f6b0bf2d79043430f05cf8b6d1866dc8?s=96&#38;d=http%3A%2F%2F1.gravatar.com%2Favatar%2Fad516503a11cd5ca435acc9bb6523536%3Fs%3D96" medium="image">
			<media:title type="html">jaggybala</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
